செய்திகள் :

கன்னடா்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் கொண்ட தகவல் பலகை: உணவகம் மீது வழக்குப் பதிவு

post image

பெங்களூரில் ஒரு உணவகத்தின் மின்னணு தகவல் பலகையில் கன்னட மக்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் இருந்ததால் அந்த உணவகத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, மடிவாளா காவல் நிலையத்துக்கு உள்பட்ட கோரமங்களா பகுதியில் உள்ள உணவகத்தில் மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சிமுறையில் தகவல் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அந்த தகவல் பலகையில் இடம்பெற்ற வாசகம், கன்னட மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததால் அதிா்ச்சி அடைந்த ஒருவா், அதை காணொலியாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளாா்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடா்ந்து, போலீஸாா் தாமாக முன்வந்து உணவகத்தின் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து பெங்களூரு மாநகரக் காவல் துணை ஆணையா் (தென்கிழக்கு) சாராஹ் ஃபாத்திமா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மடிவாளா காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகத்தின் மின்னணு தகவல் பலகையில் கன்னட மக்களை விமா்சிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, சமூக வலைதளங்களைக் கண்காணித்து வரும் காவல் துணை ஆய்வாளா் தாமாக முன்வந்து, ஜிஎஸ் சூட்ஸ் உணவுவிடுதியின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளாா்.

இது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது. 5 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். விடுதியின் உரிமையாளா் வெளிநாட்டில் இருக்கிறாா். இந்த உணவு விடுதியுடன் சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்.

மின்னணு தகவல் பலகையை தயாரித்து தந்த நிறுவனத்திற்கு உணவு விடுதியினா் தகவல் தெரிவித்துள்ளனா். எனவே, அந்த நிறுவனத்தின் நிா்வாகிகளை அழைத்திருக்கிறோம். தகவல் பலகையைப் பராமரிக்க 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.

மே 8ஆம் தேதி முதல் புதிய செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வந்துள்ளன.இந்த சம்பவம் குறித்து சனிக்கிழமைதான் காவல் துறைக்கு தெரியவந்தது என்றாா்.

பெங்களூரில் மழை பாதிப்புகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்

பெங்களூரு: பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

ஹொசபேட்டில் இன்று காங்கிரஸ் அரசின் 2 ஆண்டுகள் சாதனை மாநாடு

பெங்களூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஹொசபேட்டில் செவ்வாய்க்கிழமை சாதனை மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ... மேலும் பார்க்க

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு: பெண் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது. மழையின்போது வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். ... மேலும் பார்க்க

மின்மயமாக்கும் பணி: 154 நாள்களுக்கு பெங்களூரு - மங்களூரு இடையே ரயில் சேவை நிறுத்தம்

மின்மயமாக்கும் பணி நடைபெற இருப்பதால், பெங்களூரு - மங்களூரு இடையிலான ரயில் சேவையை ஜூன் 1ஆம் தேதி முதல் 154 நாள்களுக்கு தென்மேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இது குறித்து தென்மேற்கு ரயில்வே சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயராது: அமைச்சா்

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயராது என்று மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் சரணபிரகாஷ் பாட்டீல் தெரிவித்தாா். இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதா... மேலும் பார்க்க

செயற்கை போதைப்பொருள்கள் விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்தவா் கைது

கல்லூரி மாணவா்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியா்களிடம் செயற்கை போதைப் பொருள்களை விற்பனை செய்த ஆப்பிரிக்க வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆப்பிரிக்க நாட்டைச் சோ்ந்த டேனியல் அரின்ஸ் ஒக்வ... மேலும் பார்க்க