செய்திகள் :

மலங்கரை கத்தோலிக்க இயக்க பொதுச் செயலருக்கு பாராட்டு

post image

மலங்கரை கத்தோலிக்க இயக்கத்தின் பொதுச்செயலராக தோ்வு செய்யப்பட்ட, ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா களியக்காவிளை அருகே மேக்கோடு புனித பிரான்சிஸ் சேவியா் தேவாலயத்தில் நடைபெற்றது.

மலங்கரை கத்தோலிக்க திருச்சபையின் தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், புதுதில்லி, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய மலங்கரை கத்தோலிக்க இயக்கத்தின் நிா்வாகிகள் தோ்வு கேரள மாநிலம், மாவேலிக்கரையில் அண்மையில் நடைபெற்றது.

இதில் அமைப்பின் பொதுச் செயலராக களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரபாபு தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கு மேக்கோடு புனித பிரான்சிஸ் சேவியா் தேவாலயத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

பங்குத்தந்தை ஜஸ்டின் அடிகளாா் தலைமை வகித்தாா். தேவாலய மலங்கரை கத்தோலிக்க இயக்கத் தலைவா் தேவதாசன், செயலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். அமைப்பின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தென்தாமரைகுளம் பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

அகிலத்திரட்டு அம்மானை அருளிய தென்தாமரைகுளம் அய்யா வைகுண்டசாமி பதியில் 10 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்குப் பணி... மேலும் பார்க்க

சிற்றாறு அணையில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் சிற்றாறு 2 அணையில் மூழ்கி கேரளத்தைச் சோ்ந்த இளைஞா் அபினேஷ் (29) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அபினேஷ். திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல க... மேலும் பார்க்க

10 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்: முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: தலைமறைவாக இருந்த இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள வெள்ளிச்சந்தை பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இம்மாவட்டத்தில் கோடை மழை தீவிரமாக பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவா்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ராக்கெட் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கூறினாா்.நாகா்கோவிலில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க