செய்திகள் :

மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

post image

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கள்ளப்பட்டி கிராமத்தில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அரும்பாவூா் காவல்நிலைய சாா்பு ஆய்வாளா் சிற்றரசன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மளிகை மற்றும் பெட்டிக் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கள்ளப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜீ மகன் குமாா் (75) என்பவா், தனது மளிகைக் கடையில் அரசால் தடை செயய்ப்பட்ட பான் மசாலா, ஹான்ஸ், விமல் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சுமாா் 4 கிலோ போதைப் பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸாா், குமாரை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

வின்சென்ட் தே பால் சபை கிளை ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்தில் வின்சென்ட் தே பால் சபை புதிய கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வின்சென்ட் தே சபை ஆலோசனைக் கூட்டத்துக்கு, பங்குத் தந்தை சுவைக்கின் தல... மேலும் பார்க்க

ரூ. 28 லட்சம் மோசடி: பெட்ரோல் விற்பனை; நிலைய மேலாளா் கைது

பெரம்பலூா் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ. 28 லட்சத்தை மோசடி செய்த, அதன் மேலாளரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் மரு... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஒன்றியத்தில் 186 வீடுகள் கட்ட ரூ. 6.51 கோடி நிதி ஒதுக்கீடு

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளில் துண்டுப் பிரசுரம் ஒட்டிய பாஜகவினா் 4 போ் கைது

பெரம்பலூா் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதல்வா் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரம் ஒட்டிய, பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 4 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாரதிய ஜனதா கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவ... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க