செய்திகள் :

மாணவர்கள் மற்றும் ஆசிரியர் வேடமிட்டு லண்டன் செல்ல முயன்ற 8 பேர் கைது!

post image

மகாராஷ்டிரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் போல் வேடமிட்டு சட்டவிரோதமாக லண்டன் செல்ல முயன்ற 8 பேர் மும்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில், ஹரியாணாவைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் என 8 பேர் நேற்று (மார்ச் 10) அதிகாலை லண்டன் செல்ல காத்திருந்தனர்.

இந்நிலையில், மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் லண்டனிலுளள் பல்கலைக்கழகத்திற்கு செல்வதாகக் கூறிய அவர்களிடம் அங்கு அவர்கள் பங்குபெறவுள்ள பல்கலைக்கழகம் குறித்த விமான நிலைய அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர்களால் சரியான தகவல்கள் அளிக்க முடியவில்லை எனக் கூறப்படுகின்றது.

இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை விசாரணைக்காக தனியாக அழைத்து சென்றனர்.

இதையும் படிக்க: சொமாட்டோ பெயரை மாற்ற பங்குதாரர்கள் ஒப்புதல்!

இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலியான ஆவணங்கள் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக பிரிட்டன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் அந்நாட்டிற்கு செல்வதற்காக பிட்டூ எனும் தரகரிடம் ஆளுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கியதாகவும் அந்த தரகர்தான் அவர்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் போல் வேடமிட்டு பயணிக்க செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும், அந்த தரகர் அவர்களுக்கு போலியான விசா மற்றும் போலியான தூதரக ஆவணங்கள் ஆகியவை வழங்கி ஏமாற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 8 பேரும் சாகர் காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

முன்னதாக, போலியான கடவுச்சீட்டு மற்றும் விசாக்களின் மூலம் சுமார் 80 பேரை கனடா, துருக்கி, நெதர்லாந்து மற்றும் போலாந்து ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பிய தரகரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க

அதீத உணவு சாப்பிடும் விடியோக்கள் மூலம் பிரபலமானவர் உடல் பருமனால் மரணம்!

அதீத உணவுகளை சாப்பிட்டு அதனை டிக்டாக் விடியோவாக வெளியிட்டு பிரபலமடைந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உடல் பருமனால் மரணமடைந்துள்ளார். துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் எஃபெகான் குல்தூர் (வயது 24)... மேலும் பார்க்க

ஆற்றின் முகத்துவாரம் தோண்டுவதில் மோதல்! 40 கிராமவாசிகள் கைது!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் ஆற்றின் முகத்துவாரம் தோண்டப்பட்ட விவகாரத்தில் இரண்டு கிராமங்களுக்கிடையே வெடித்த மோதலினால் 40 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சம் மாவட்டத்தில் ராமாய... மேலும் பார்க்க

துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு நாய்! உரிமையாளர் படுகாயம்!

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வளர்ப்பு நாயால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உரிமையாளர் படுகாயமடைந்துள்ளார். டென்னிசி மாகணத்தைச் சேர்ந்தவர் ஜெரால்டு கிர்க்வுட், இவர் தனது வீட்டில் ஓரியோ எனப் பெயர... மேலும் பார்க்க

நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் கைது!

இந்தியாவிலிருந்து அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் புது தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 10 அன்று காவல் துறையினருக்கு கிடைத... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினரின் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 வீரர்கள் பலி! 13 பேர் படுகாயம்!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர். சேனாபதி மாவட்டத்திலுள்ள சங்கோபங் கிராமத்தின் அருகில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் செ... மேலும் பார்க்க