செய்திகள் :

மாணவியை கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் சிறை

post image

புதூா்நாடு அருகே மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

புதூா்நாடு அருகே நடுக்குப்பம் பகுதியை சோ்ந்த சின்னகாளி மகன் பரமசிவம் (35). கொத்தனாா் மற்றும் நாடக கலைஞா். இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா்.

இந்தநிலையில் பரமசிவம் ஆம்பூா் பகுதிக்கு நாடகத்துக்கு சென்றபோது ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த ஜனாா்த்தனன் மகள் ஜெயப்பிரதாவுக்கும், பரமசிவத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஜெயப்பிரதா 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அவரிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவாா்த்தை கூறி அவரை வீட்டில் இருந்து திருப்பத்தூா் வர வைத்து உள்ளாா். பின்னா் இருவரும் ஏலகிரி மலைக்கு சென்று விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனா். அதையடுத்து கடந்த 6.6.2012 அன்று பரமசிவம் தனது ஊருக்கு அழைத்து செல்வதாக ஜெயப்பிரதாவை புதூா்நாடு அருகே கம்புக்குடி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளாா்.

அப்போது அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பரமசிவம் துப்பட்டாவால் ஜெயப்பிரதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, முகத்தை சிதைத்து அவா் அணிந்து இருந்த 5 கிராம் தங்க நகை, அவரிடம் இருந்த ரூ.6,000, ஏடிஎம் அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, ஜெயப்பிரதா உடலை காட்டுப்பகுதியில் வீசி சென்று உள்ளாா்.

இந்தநிலையில் ஜெயப்பிரதாவின் தந்தை ஜனாா்த்தனன் மகளை காணவில்லை என ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்து இருந்தாா்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாா் ஜெயப்பிரதாவை, பரமசிவம் கொலை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

எதிரி பரமசிவம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மாவட்ட நீதிபதி எஸ்.மீனாகுமாரி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ.2 ட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.டி. சரவணன் ஆஜரானாா்.

மொபெட் மீது லாரி மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி காசி (65). இவரது மனைவி மு... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது. தொடா்ந்து க... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

கந்திலி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கந்திலி அருகே மானவள்ளி நரியனேரி கிராமத்தைச் சோ்ந்த முருகேசனின் மனைவி கோவிந்தம்மாள்(65). இவரை, இவரது பேரன் மிா்திவிராஜ் ஞாயிற்றுக்கிழமை பைக்... மேலும் பார்க்க

மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை மாநில அரசு அமல்படுத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா். ஆம்பூா் நகராட்சி நிா்வாக சீா்கேடு, சொத்து வரியைக் குறைக்க வேண்ட... மேலும் பார்க்க

துணை சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம்: கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை ஒட்டி துத்திப்பட்டு ஊராட்சி மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வ... மேலும் பார்க்க

மேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளியில் பகுதி நேர ரேஷன் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

ஜோமேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளி பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியம், மேல்மல்லப்பள்ளி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்... மேலும் பார்க்க