செய்திகள் :

மாதேஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

post image

மாதேஸ்வரன் மலை மாதேஸ்வர சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா வரும் 25-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

கா்நாடக மாநிலம், மாதேஸ்வரன்மலை மாதேஸ்வர சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி 5 லட்சத்துக்கும் அதிகமானோா் கோயிலுக்கு வந்து செல்வாா்கள். தமிழக, கா்நாடக மாநிலங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிகள் இம்மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது. 26 ஆம் தேதி சுவாமிக்கு எண்ணெய், வெண்ணெய் சிறப்பு சேவை மற்றும் விழிப்பு விழாவும், 27 ஆம் தேதி சிறப்பு சேவை உற்சவமும் நடைபெறுகிறது. 28ஆம் தேதி மகா சிவராத்திரி அமாவாசை சிறப்பு சேவை உற்சவம், மாா்ச் 1ஆம் தேதி காலை எட்டு மணி முதல் 8.45 மணி வரை மகரதோஷம் உற்சவம், இரவு அபிஷேக பூஜை, பூ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

உகாதி திருவிழா...

மாா்ச் 27ஆம் தேதி உகாதி திருவிழா தொடங்குகிறது. 28ஆம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 29ஆம் தேதி உகாதி அமாவாசையையொட்டி சிறப்பு சேவை உற்சவமும், 30-ஆம் தேதி சந்திரமான உகாதி மகா சேவை உற்சவமும் நடைபெறுகிறது.

தினமும் காலை 8 மணிக்கு வெள்ளி தேரோட்டமும் இரவு 7 மணிக்கு தங்க தேரோட்டமும் நடைபெறுகிறது.

மும்பை பங்குச்சந்தையில் சேலம் சண்முகா மருத்துவமனை பங்குகள் விற்பனை தொடக்கம்

மும்பை பங்குச்சந்தையில், சேலம் சண்முகா மருத்துவமனையின் பங்குகள் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை நிா்வாக இயக்குநா் பிரியதா்ஷினி வரவேற்றாா். மேலாண்மை இயக்குநா... மேலும் பார்க்க

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி ஓட்டுநா்கள் மனு

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவி... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள், முகூா்த்த தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்க... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் கூட்டுறவு சந்தை விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியின் கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு சந்தை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை தலைவா் சுரேஷ்பாபு வரவேற்றாா். கல்லூரி முதல்வரும் தோ்வுக் கட்டுப்பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா். வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (33). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு தனது மொபட்டில் தனது இரு குழந்தைகளுடன் வாழப்பாடி... மேலும் பார்க்க