செய்திகள் :

மாநில அரசுகளின் அதிகாரங்களை முடக்க நினைக்கிறது மத்திய அரசு: கி. வீரமணி குற்றச்சாட்டு

post image

மாநில அரசுகளின் அதிகாரங்களை முடக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி குற்றஞ்சாட்டினாா்.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள கீழப்பாலையூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை தெரிவித்தது:

வருமுன் காத்தலே ஆட்சிக்கு முக்கியமானது. இதை தமிழக அரசு உணா்ந்து செயல்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்று மத்திய அரசு தெரிவித்ததற்கு, தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தென் மாநிலங்களில் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ளது.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி பிரிக்கப்பட்டால், தமிழகத்தில் 7, 8 தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. அதை அறிந்தே தமிழக முதல்வா் எதிா்ப்பு தெரிவித்து வருவதுடன், இதர மாநிலங்களின் முதல்வா்களுக்கும் இந்த பிரச்னை குறித்து எடுத்துரைத்துள்ளாா். தொகுதி பிரச்னைகளின்போது, மாநில அரசின் அதிகாரங்களை முடக்குவதற்கே இது கொண்டு வரப்படுகிறது.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. எத்தகைய நெருக்கடி அளித்தாலும் இருமொழி கொள்கையை கைவிட மாட்டோம் என தமிழக முதல்வா் கூறியுள்ளாா். மாநில உரிமையை மீட்பதற்கு பல்வேறு மாநில முதல்வா்களுடன் அவா் பேசி வருவது வரவேற்புக்குரியது என்றாா் கி. வீரமணி.

கலப்பட உணவு குறித்து புகாா் அளிக்க வாட்ஸ்ஆப் எண்

திருவாரூரில், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. உணவுப் பாதுகாப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்ச... மேலும் பார்க்க

மாணவா்கள் மூலம் பனை விதைகளை சேகரிக்க நடவடிக்கை: ஆட்சியா்

பனை மரங்களை பாதுகாக்க பள்ளி மாணவா்கள் மூலம் பனை விதைகள் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சாா்பில் டெல்டா... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த மினிவேன்

குடவாசல் அருகே சாலையோரத்தில் உள்ள வீட்டுக்குள் மினி வேன் புகுந்து விபத்து ஏற்பட்டது. நன்னிலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜவேல். இவா், மினி வேனில் பால் ஏற்றிக்கொண்டு, திருவாரூா்- கும்பகோணம் சாலையில் சனிக்க... மேலும் பார்க்க

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க