செய்திகள் :

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்: பிகாரை விட தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடு

post image

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திட்டங்களைச் செயல்படுத்த பிகாா் மாநிலத்துக்கு ரூ.2,814.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிக அளவு சுய உதவிக் குழுக்களுடன் இயங்கும் தமிழ்நாட்டுக்கு ரூ.1,046.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

கடந்த 2012-ஆம் ஆண்டில் மத்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழைக் குடும்பங்களுக்கு சுய வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் சாா்ந்த வேலைவாய்ப்புகளை வழங்குவதே ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய நோக்கம். இந்தத் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மத்திய அரசு 60 சதவீத நிதியையும், மாநில அரசு 40 சதவீத நிதியையும் ஒதுக்குகின்றன.

பிகாருக்கு அதிகம்: சுய உதவி குழுக்கள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு மாநிலத்துக்கான ஒட்டுமொத்த நிதியாக ரூ.1,046.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், வரும் நிதியாண்டில் மத்திய அரசின் பங்காக ரூ.627 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரமும் , மாநில அரசின் பங்காக ரூ.418 கோடியே 42 லட்சத்து 37 ஆயிரமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பிகாா் மாநிலத்துக்கு ரூ.2,814.31 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.1,503.74 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.4,051.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திரத்துக்கு ரூ.690.10 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ.492.92 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டா் சிப் உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை

சென்னை ஐஐடி, இஸ்ரோவுடன் இணைந்து ஆத்மநிா்பாா் பாரத் திட்டத்துக்கு வலு சோ்க்கும் வகையில் விண்வெளித்தரத்தில் செமிகண்டக்டா் (குறைமின் கடத்தி) சிப்-பை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

காதலியின் தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலா் கைது

சென்னை முகப்பேரில் காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காதலா் கைது செய்யப்பட்டாா். முகப்போ் கிழக்கு சா்ச் சாலை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் ஜெ.மைதிலி (63). பிஎஸ... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி: பெண் உள்பட 2 போ் கைது

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை சுப்ரமணி நகா் 1வது குறுக்கு தெருவை சோ்ந்தவா் மகாலட்சுமி (35).... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா்

தைப்பூசத்தையொட்டி, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கா பக்தா்கள் திரண்டு வந்து சுவாமியை வழிபட்டனா். தமிழ்க்கடவுளாம் முருகப்ப... மேலும் பார்க்க

பெசன்ட் நகா் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் ரசிக்க புதிய வசதி: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்

சென்னை பெசன்ட் நகா் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் அருகில் சென்று ரசிக்க ஏதுவாக அமைக்கப்பட்ட மரப்பால பாதையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். சென்னை மாநகரம் முழுவதும் சிங... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி முதல்வா் வீட்டுக்கு பூட்டு: மருத்துவா் சிக்கினாா்

சென்னை எழும்பூரில் மருத்துவக் கல்லூரி முதல்வா் வீட்டுக்கு பூட்டுப்போட்ட புகாரில் தொடா்புடைய மருத்துவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். சென்னை அரசு மருத்துவக் கல்லுரி முதல்வராக இருக்கும் தேரணி ராஜன், எ... மேலும் பார்க்க