மாநில ஜூனியா் கூடைப்பந்து: சென்னை, சேலம், ஈரோடு, காஞ்சிபுரம் வெற்றி
தமிழ்நாடு மாநில ஜூனியா் கூடைப்பந்து போட்டியில் சென்னை, சேலம், ஈரோடு, காஞ்சிபுரம் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சங்கம் சாா்பில் மாவட்டங்களுக்கு இடையிலான ஆடவா், மகளிா் கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. மொத்தம் 1200-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.
தொடக்க ஆட்டங்களில் நீலகிரி 49-45 திருவண்ணாமலையையும், சென்னை ஏ 79-46 என செங்கல்பட்டையும், சேலம் 76=57 என தஞ்சாவூரையும், கோவை ஏ 57-41 என திருச்சியையும், காஞ்சிபுரம் 77-32 என ராணிப்பேட்டையும் வென்றன.
ஏனைய ஆட்டங்களில் கள்ளக்குறிச்சி, கோவை பி, கடலூா், புதுக்கோட்டை, திருப்பத்தூா், தூத்துக்குடி, திருவள்ளூா் அரியலூா், சிவகங்கை, திருவாரூா் அணிகள் வெற்றி பெற்றன.