செய்திகள் :

மாமல்லபுரம் மாநாடு: பாமகவினருக்கு அன்புமணி அறிவுறுத்தல்

post image

மாமல்லபுரத்தில் மே 11-இல் நடக்கும் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாட்டுக்கு காவல் துறை வழங்கிய வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து, அமைதி- கட்டுப்பாட்டுடன் பாமகவினா் வர வேண்டும் என்று கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாட்டை நடத்துவதன் நோக்கம் நமது வலிமையைக் காட்டுவதல்ல. மாறாக, தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கும், சமூகநீதிக்கும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் தேவையான திட்டங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையாக முன்வைத்து நிறைவேற்றச் செய்வது தான்.

மாமல்லபுரம் மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடையப்போவது உறுதி. அதே நேரத்தில், இந்த மாநாடு எவ்வித விமா்சனத்துக்கும் ஆளாகிவிடக் கூடாது. சிறு சலசலப்பு கூட ஏற்படக்கூடாது. மாநாடு தொடா்பாக காவல்துறையினா் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். மற்றவா்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்:மேலும், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அன்புமணி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட காணொலி பதிவில், மாமல்லபுரத்தில் பாமக சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளதால் மே 11-ஆம் தேதி கிழக்கு கடற்கரைச் சாலை, ஓஎம்ஆா் சாலை ஆகியவற்றை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க