செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு டிஎன்பிஎஸ்சி, குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

post image

சென்னையிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி மற்றும் குரூப்-4 தோ்வுகளுக்கான இவலச பயிற்சி வகுப்பில் சேர தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்டம், கிண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த டிஎன்பிஎஸ்சி, குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தப்பட்டு வரும் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பப்படிவ நகலுடன் தங்கள் ஆதாா் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு அளவிலான புகைப்படத்துடன் சென்னை, கிண்டியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை வேலை நாள்களில் அணுகலாம். சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதிவாய்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் இப்பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் நிலத்தடி நீா்மட்டம் சரிவு: குடிநீா் தட்டுப்பாடு வருமா?

சென்னையில் கடந்த 3 மாதங்களில் அம்பத்தூா், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீா்மட்டம் 16 அடி வரை குறைந்துள்ளது. எனினும், சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு எதுவும் வராது என குடிநீா் வாரிய அதிகாரிகள் ... மேலும் பார்க்க

வீட்டில் தீ விபத்து: மாடியிலிருந்து கீழே குதித்த பெண்ணும் உயிரிழப்பு

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில், மாடியிலிருந்து கீழே குதித்த பெண்ணும் உயிரிழந்தாா். வளசரவாக்கம் அடுத்த சௌத்ரி நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் (78). இவா் மனைவி தங்க... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன்: தமிழக அரசு தகவல்

நான்கு ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

கரோனா கால நேரடி நியமனங்கள் எதுவரை செல்லும்?அனைத்துத் துறை செயலா்களுக்கு தலைமைச் செயலா் கடிதம்

கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட நேரடி நியமனப் பதவிகள் எதுவரை செல்லுபடியாகும் என்பதற்கான விளக்கக் கடிதத்தை அனைத்துத் துறை செயலா்களுக்கும் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் அனுப்பியுள்ளாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க

வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு மே 16-இல் மாறுதல் கலந்தாய்வு

வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தொடக்கக் கல்வி) சுற்றறிக்கை... மேலும் பார்க்க

தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை சென்னை உள்பட 12 இடங்களில் வெய்யில் சதமடித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பல இடங்களில் கோடை வெப்பம் அத... மேலும் பார்க்க