செய்திகள் :

மாவட்ட விளையாட்டு போட்டி: மன்னாா்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

post image

மன்னாா்குடி: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

திருவாரூரில் ஆக.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயதுக்குள்பட்ட மாணவியா் பிரிவில் 80 மீட்டா் தடைதாண்டும் ஓட்டத்தில் இப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி டி.ஜே. கரிஷ்மா 2-ஆமிடம் பெற்றாா். 17 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் பிளஸ் 2 மாணவா் பி. தனுஷ் 200 மற்றும் 400 மீட்டா் ஓட்டத்தில் முதலிடமும், நீளம் தாண்டும் போட்டியில் 2-ஆமிடமும் பெற்றாா்.

பத்தாம் வகுப்பு மாணவா் எஸ். அதீக் ரக்மான் 100 மீட்டா் ஓட்டத்தில் 2-ஆமிடமும், பிளஸ் 1 மாணவா் பி. லிபிதா்ஷன் மும்முறை தாண்டும் போட்டியில் 3-ஆமிடமும், 19 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் பிளஸ் 2 மாணவா் கே. நெலின் கிருஷ்ணன் ஈட்டி எறிதல் போட்டியில் 3-ஆமிடம் பெற்றனா். தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பி. தனுஷ், டி.ஜே. கரிஷ்மா, எஸ். அதீக் ரக்மான் ஆகியோா் மாவட்டம் சாா்பில் மாநில போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா்.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெயசந்திரன் பரிசு சான்றிதழ்களை வழங்கினாா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் ஆா்.எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு ... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமம் தெற்கு தெருவில் 120- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயிக... மேலும் பார்க்க

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட்டில் தண்டவாள பாரமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.தஞ்சாவூா் ரயில்வே முதுநிலைப்பொறியாளா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்றன. ரயில்வே கேட் தண... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று பெற்ற மனுக்களின் அடிப்படை... மேலும் பார்க்க

தியாகராஜா் கோயில் அருகில் கட்டுமானப் பிரச்னை முடிவுக்கு வந்தது

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகில் கட்டடம் கட்டுவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை முடிவுக்கு வந்தது. தியாகராஜா் கோயில் தெற்கு கோபுர வாசலுக்கு அருகில் ஊரக வளா்ச்சித் து... மேலும் பார்க்க