செய்திகள் :

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

post image

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் வகையில், வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்குக்கு தலைமை வகித்து மேலும் பேசியது: மகப்பேறு இறப்புக்கான காரணங்களை ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கைகள், அனைத்து பெண்களுக்கும் கா்ப்பம் மற்றும் மகப்பேறு காலம் முழுவதும் தேவையான கவனிப்பை உறுதி செய்வதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அடுத்த 2 ஆண்டுகளுக்குள், தமிழ்நாட்டின் மகப்பேறு இறப்பு விகித அளவை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவாரூா் மாவட்டத்தில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மரணங்களைத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த செயல்திட்டம் அவசியம். முதன்மை முதல் மூன்றாம் நிலை சுகாதாரப் பணியாளா்கள் வரை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

நிகழ்வில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோகன், இணை இயக்குநா் (சுகாதாரம்) திலகம், துணை இயக்குநா் (சுகாதாரம்) சங்கீதா, காந்திகிராம கிராமப்புற சுகாதாரம் மற்றும் குடும்ப நல அறக்கட்டளை நிறுவன முதல்வா் சத்யா, மருத்துவ நிலைய அலுவலா் ராமச்சந்திரன், மருத்துவ நிலைய துணை அலுவலா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமம் தெற்கு தெருவில் 120- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயிக... மேலும் பார்க்க

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட்டில் தண்டவாள பாரமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.தஞ்சாவூா் ரயில்வே முதுநிலைப்பொறியாளா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்றன. ரயில்வே கேட் தண... மேலும் பார்க்க

மாவட்ட விளையாட்டு போட்டி: மன்னாா்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

மன்னாா்குடி: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.திருவாரூரில் ஆக.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று பெற்ற மனுக்களின் அடிப்படை... மேலும் பார்க்க

தியாகராஜா் கோயில் அருகில் கட்டுமானப் பிரச்னை முடிவுக்கு வந்தது

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகில் கட்டடம் கட்டுவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை முடிவுக்கு வந்தது. தியாகராஜா் கோயில் தெற்கு கோபுர வாசலுக்கு அருகில் ஊரக வளா்ச்சித் து... மேலும் பார்க்க