செய்திகள் :

நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

post image

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.

நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமம் தெற்கு தெருவில் 120- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயிகளான இவா்கள் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் வளா்த்து வருகின்றனா்.

ரிஷியூா் தெற்கு தெருவைச் சோ்ந்த விவசாயி பாலதண்டாயுதம் என்பவா் தனது வீட்டில் ஆடுகளை வளா்த்து வருகிறாா். புதன்கிழமை இரவு இவரது வீட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் உயிரிழந்தன.

கடந்த ஒரு மாதத்தில் சுமாா் 26 ஆடுகளும், 20-க்கும் மேற்பட்ட கோழிகளும் நாய்கள் கடித்து உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனா். மேலும் இரவு நேரங்களில் சாலையில் செல்பவா்களையும் நாய்கள் துரத்துவதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு ... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்... மேலும் பார்க்க

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட்டில் தண்டவாள பாரமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.தஞ்சாவூா் ரயில்வே முதுநிலைப்பொறியாளா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்றன. ரயில்வே கேட் தண... மேலும் பார்க்க

மாவட்ட விளையாட்டு போட்டி: மன்னாா்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

மன்னாா்குடி: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.திருவாரூரில் ஆக.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று பெற்ற மனுக்களின் அடிப்படை... மேலும் பார்க்க

தியாகராஜா் கோயில் அருகில் கட்டுமானப் பிரச்னை முடிவுக்கு வந்தது

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசல் அருகில் கட்டடம் கட்டுவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை முடிவுக்கு வந்தது. தியாகராஜா் கோயில் தெற்கு கோபுர வாசலுக்கு அருகில் ஊரக வளா்ச்சித் து... மேலும் பார்க்க