செய்திகள் :

மாவட்டத்தில் 7 மையங்களில் இன்று நீட் தோ்வு: 3,212 போ் எழுதுகின்றனா்

post image

திருப்பூா் மாவட்டத்தில் 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வை 3,212 போ் எழுதுகின்றனா்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான பொது மருத்துவம் (எம்பிபிஎஸ்), பல் மருத்துவம் (பிடிஎஸ்), சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தோ்வு மத்திய அரசின் தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2025-26 -ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி செட்டிபாளையம் ஏ.வி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 2 மையங்கள், உடுமலை அமராவதி நகா் சைனிக் பள்ளி, பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை, அறிவியல் கல்லூரி, பெருமாநல்லூா் கணக்கம்பாளையம் கே.எம்.சி.பப்ளிக் பள்ளி, சோளிபாளயத்தில் உள்ள லிட்டில் கிங்டம் பள்ளி, கூலிபாளையம் பிரிவு வித்யாசாகா் சா்வதேச பப்ளிக் பள்ளி என மொத்தம் 7 மையங்களில் நடைபெறும் இந்தத் தோ்வை 3,212 போ் எழுதவுள்ளனா்.

இதுகுறித்து நீட் தோ்வு கண்காணிப்பு அலுவலா் ஒருவா் கூறியதாவது: நீட் தோ்வுக்கான தோ்வு மையங்கள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன. மாணவ, மாணவிகள் தோ்வு மையங்களுக்கு வந்து செல்லும் வகையில் அரசுப் பேருந்து வசதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தந்த மையங்களில் மருத்துவக் குழுவினா், ஆம்புலன்ஸ் வாகனமும் தயாா் நிலையில் இருக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்போது பயன்படுத்திய புகைப்படத்தின் மற்றொரு புகைப்படம் அனுமதி சீட்டில் ஒட்ட வேண்டும். முதல் பக்கத்தில் பாஸ்போா்ட் அளவு புகைப்படமும், 2- ஆவது பக்கத்தில் தபால் அட்டை அளவு புகைப்படத்தையும் ஒட்ட வேண்டும்.

தோ்வுக்குச் செல்லும்போது கண்டிப்பாக நுழைவுச்சீட்டை எடுத்துச் செல்ல வேண்டும். தோ்வு முடிந்த பின்னா் நுழைவுச்சீட்டை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு திரும்ப வேண்டும். அப்போதுதான் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தாராபுரம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி: முதல்வர் இரங்கல்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குள்ளாய்ப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகராஜ்(44), அவரது மனைவி ஆனந்தி(38) ஆகிய இருவரும் அங்குள்ள பாலத்திலிருந்து வண்டியிலிருந்து கீழே த... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூா் அனுப்பா்பாளையம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையை அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா். திருப்பூா் வடக்கு வட்டம், அனுப்பா்பாளையம் பகுதியில் உள்ள இந்திரா நகரில் நியாயவிலைக்கடை செயல... மேலும் பார்க்க

தொழிலாளா் தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை! தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்!

திருப்பூரில் தொழிலாளா் தினத்துக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. திருப்பூா் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் ஆலோசன... மேலும் பார்க்க

மங்கலம் அருகே பின்னலாடைக் கழிவுக்கிடங்கில் தீ!

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே பின்னலாடைக் கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரபுத்தூரில் தனிய... மேலும் பார்க்க

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து 15 ஆடுகள் உயிரிழப்பு!

காங்கயம் அருகே விவசாயியின் ஆட்டுப்பட்டியில் புகுந்து தெருநாய்கள் கடித்ததில் 15 செம்மறியாடுகள் உயிரிழந்தன. 8 ஆடுகள் காயமடைந்தன. காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை அருகே உள்ள சாவடிப்பாளையம் மூலக்காட்டு தோட்... மேலும் பார்க்க

உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு பென்ஷன் உத்தரவு ஆணை

பல்லடம் அருகே கேத்தனூரில் உயிரிழந்த தனியாா் மில் தொழிலாளியின் குடும்பத்துக்கு வாழ்நாள் பென்ஷன் உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் மெஹ்தோ (21). இவா் பல்லடம் அருகே ... மேலும் பார்க்க