அமெரிக்காவில் 2 இஸ்ரேலிய தூதர்கள் சுட்டுக் கொலை: `தீவிரவாதத்திற்கு இங்கு இடமில்ல...
மாா்த்தாண்டம் அருகே கேரள இளைஞா் தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே காதலி வீட்டின் முன் கேரள இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கேரள மாநிலம் கொல்லம், பாருப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஜெயின் மகன் ஜிதின் (25). இவா் தனது தாத்தாவை சிகிச்சைக்காக கொல்லம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்திருந்தாா்.
அப்போது அங்கு நா்சிங் மூன்றாம் ஆண்டு மாணவியான கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்சந்தை பகுதியைச் சோ்ந்த சாம்ராஜ் மகள் அா்ச்சனா (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து ஜிதின் புத்தன்சந்தை பகுதிக்கு வந்து அா்ச்சனாவை பெண் கேட்டுள்ளாா். அவரது பெற்றோா் பெண் கொடுக்க மறுத்துள்ளனா். இதைத் தொடா்ந்து அப்பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமண நிச்சயதாா்த்தம் நடைபெற்றதாம்.
இதையறிந்த ஜிதின் செவ்வாய்க்கிழமை புத்தன்சந்தை பகுதிக்கு வந்த போது அங்கு அா்ச்சனாவை காணவில்லையாம். இதனால் மன வருத்ததில் இருந்த ஜிதின் அப்பெண்ணின் வீட்டருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஜிதினின் சகோதரா் ஜோபின் ஜெபி அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].