செய்திகள் :

மிகக் குறைந்த விலையில்! டிஎஸ்எல்ஆர் கேமரா தரத்தில் ரியல்மியின் பட்ஜெட் 5ஜி!

post image

மிகக்குறைந்த விலையில் டிஎஸ்எல்ஆர் கேமரா தரத்தில் ரியல்மியின் புதிய மொபைல் போன் வெளியாகியுள்ளது.

மிகக் குறைந்த விலையில் நிறைவான சேவையில் ஸ்டைலிஷான தோற்றத்தில் மொபைல் தேடுவோருக்கு ரியல்மி சி20 5ஜி(Realme C20 5G) அற்புதமான தேர்வாக இருக்கும். அதிக செலவில்லாமல் சக்திவாய்ந்த ஸ்மார்ட் போன் தேர்வர்களுக்கான சிறப்பான போனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே & டிசைன்

6.5 அங்குலத்தில் ஹெச்டி+ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவையும், 720*1600 பிக்சல்களுடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஸ் ரேட்டையும் கொண்டுள்ளது.

புராசஸ்ஸர் & பெர்ஃபார்மன்ஸ்

இந்த போன் மீடியா டெக் ஹீலியோ ஜி35 செயலியால் இயக்கப்படுகிறது. மேலும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது.

கேமரா

கேசுவல் போட்டோகிராபிக்கு 8MP கேமராவும், செல்ஃபிக்கு 5MP கேமராவும் உள்ளது.

பேட்டரி & சார்ஜிங்

இந்த போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருப்பதால் ஒரு நாள் முழுவதும் தாராளமாகப் பயன்படுத்தலாம். இதனுடன் 10 வாட் சார்ஜரும் கொடுக்கப்படுகிறது.

உள் நினைவகம் & நினைவகம்

இதில், 2ஜிபி உள் நினைவகமும், 32 ஜிபி நினைவகமும் அதனுடன் மெமரி கார்டு போடும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விலை என்ன?

இந்த வகை மொபைலில் தற்போது 4ஜி மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.6,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே மாடலில் 5ஜி மொபைல் ஃபிளிப் கார்ட், அமேசான் போன்ற தளங்களில் சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் ரூ.7,499-க்கு கிடைக்கின்றன. இந்த மொபைலுக்கு ஃபிளிப் கார்ட் தளத்தில் 3 லட்சத்துக்கு அதிகமான மதிப்புரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

Realme Launches Budget-Friendly 5G Smartphone with DSLR-like Camera

இதையும் படிக்க :அமேசான் பிரைம் விற்பனையில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்!

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க