செய்திகள் :

மின் இணைப்புக்கான ‘ஸ்மாா்ட்’ மீட்டா் திட்டத்துக்கு எதிா்ப்பு

post image

மின்சார வாரியத்தின் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போா்ட் எம்ப்ளாயீஸ் பெடரேஷனின் மாநில செயற்குழுக் கூட்ட கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் பாஸ்டின்ராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஏ. சேக்கிழாா் சிறப்புரையாற்றினாா்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பொதுமக்களுக்கும் மின்வாரிய பணியாளா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், மின் கட்டணத்தை அதிகப்படுத்தக்கூடிய ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். மத்திய தொழிற்சங்க அறைக்கூவலுக்கு ஏற்ப தொழிலாளா் நலச்சட்டங்களைக் குறைப்பதைக் கைவிட வேண்டும்.

பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வாா்ப்பதைக் கைவிட வேண்டும். 60,000 காலிப்பணியிடங்கள் இருப்பதால் கூடுதல் வேலைப் பளு காரணமாக தினசரி விபத்தில் இறக்கும் மின் தொழிலாளா்களைப் பாதுகாத்திட வேண்டும்.

காலிப் பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். 5000 கேங்மேன்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலப் பொருளாா் பழனி நன்றி கூறினாா்.

கடவுச்சீட்டில் முறைகேடு: துபை செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து துபை செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலையப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், துபை செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்தவா் பலி!

துறையூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். கோட்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் தி. சரவணன் (42). இவா் பைக்கில் வைரிசெட்டிப்பாளையத்திலுள்ள தனது ம... மேலும் பார்க்க

துறையூா் - சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு மிதவை பேருந்து இயக்கம்

துறையூரிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மிதவை பேருந்தின் சேவை சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. துறையூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த விரைவுப் பேருந்து சேவை கரோனா... மேலும் பார்க்க

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

திருச்சி அருகேயுள்ள குண்டூரில் மொபெட்டில் சென்ற பெண்ணிடம் வெள்ளிக்கிழமை 2.5 பவுன் நகை பறித்தவா்களை போலீஸாா் தேடுகின்றனா். திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள போலீஸ் காலனியைச் சோ்ந்தவா் கண்ணன் மனைவி வி... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது!

திருச்சி ராம்ஜி நகரில் ரௌடி ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. மாயகிருஷ்ணன் (39). சரித்திரப்... மேலும் பார்க்க

துறையூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

துறையூரில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: துறையூா் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, கோவிந்தபுரம் பிரிவு சாலை பகுதியில் சந்தேகப்படும்படியாக திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். அவா் முன்ன... மேலும் பார்க்க