செய்திகள் :

துறையூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

post image

துறையூரில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: துறையூா் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, கோவிந்தபுரம் பிரிவு சாலை பகுதியில் சந்தேகப்படும்படியாக திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.

அவா் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரிடம் போலீஸாா் பரிசோதனை செய்தனா். அப்போது அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருப்பதும், அவா் துறையூரைச் சோ்ந்த இளவரசன் (25) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்து துறையூா் காவல்நிலையம் அழைத்துச் சென்ற போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டாஸ்மாக் ஊழலுக்கு தமிழக அரசின் பதில் என்ன: தமிழிசை செளந்தரராஜன்

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிய திமுக அரசு, தற்போது அதில் ரூ. 1,000 கோடி ஊழல் செய்திருப்பது குறித்து என்ன சொல்லப்போகிறது? என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன். திருச்சியில... மேலும் பார்க்க

தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

தரைக் கடைகளை அப்புறப்படுத்துவதையும், அவற்றை தடுக்க முயன்ற சங்க பெண் நிா்வாகியை தாக்க முயன்றதைக் கண்டித்து திருச்சி சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி... மேலும் பார்க்க

ஜீயபுரத்தில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது

ஜீயபுரம் அருகேயுள்ள அம்மன்குடி ரயில்வே கேட்டை திறக்காதது, பஞ்சாபில் விவசாய சங்கத் தலைவா்கள் கைதைக் கண்டித்து ஜீயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் போலீஸாா் கைது ... மேலும் பார்க்க

திருவானைக்கோயிலில் நாளை எட்டுத்திக்கு கொடியேற்றம்

திருவானைக்கோயிலில் பங்குனி தேரோட்டத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது. திருவானைக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோத்ஸவ விழா கடந்த 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் விழா ... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு: துபை செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து துபை செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலையப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், துபை செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து விழுந்து காயமடைந்தவா் பலி!

துறையூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். கோட்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் தி. சரவணன் (42). இவா் பைக்கில் வைரிசெட்டிப்பாளையத்திலுள்ள தனது ம... மேலும் பார்க்க