செய்திகள் :

திருவானைக்கோயிலில் நாளை எட்டுத்திக்கு கொடியேற்றம்

post image

திருவானைக்கோயிலில் பங்குனி தேரோட்டத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

திருவானைக்கோயிலில் பங்குனி மண்டல பிரமோத்ஸவ விழா கடந்த 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இந்த விழா ஏப். 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பங்குனித் தேரோட்டத்துக்காக சுவாமி சந்நிதியைச் சுற்றியுள்ள 3-ஆம் பிரகாரத்தில் அஷ்டதிக்கு திசையில் (எட்டுத்திக்கு) நடப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்னத்தில் நடைபெற உள்ளது. அப்போது சுவாமியும், அம்மனும் எழுந்தருளுவா். மாலை 6 மணியளவில் ஏகசிம்மாசனத்தில் சோமாஸ்கந்தருடன் சுவாமியும், அம்மனும் புறப்பட்டு 4-ஆம் பிரகாரத்தை வலம்வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றனா். 2-ஆம் நாளான 26-ஆம் தேதி புதன்கிழமை சுவாமி சூரிய பிரபையிலும், அம்மன் சந்திரபிரபையிலும், 3-ஆம் நாளான 27-ஆம் தேதி வியாழக்கிழமை சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும், 4-ஆம் நாளான 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமி கைலாச வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், 5-ஆம் நாளான சனிக்கிழமை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி பனை ஓலைகளால் வேயப்பட்ட சப்பரத்தில் தனித்தனியாக எழுந்தருளி தெருவடைச்சானாக 4-ஆம் பிரகாரம் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றனா். முக்கிய நிகழ்ச்சியான 6-ஆம் நாளான பங்குனித் தேரோட்டம் காலை 7.20-க்கு நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி பெரிய தோ்களில் எழுந்தருளி தேரோட்டம் கண்டருளுகின்றனா். விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வே.சுரேஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 8 போ் கைது

திருச்சி மாவட்டம் துறையூா் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் நிலையத்துக்குள்பட்ட மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்ற 8 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். திருச்சி மாவட்டம் த... மேலும் பார்க்க

புகைப்படக்காரா் மீது தாக்குதல்: பாஜகவினா் மீது போலீஸாா் வழக்கு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் படம் எடுத்த புகைப்படக்காரா் மீது தாக்குதல் நடத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருச்சியில் தேசிய கல்விக் கொள்க... மேலும் பார்க்க

மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு: வம்பன் உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

திருச்சி மாவட்டத்தில் வம்பன் ரக உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு 90 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா். திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் வே... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயா்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்: அண்ணாமலை

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளை உயா்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். பாஜக சாா்பில் தேசிய கல்விக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தி... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை நிலைய நகை மதிப்பீட்டாளா் பயற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பா, திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சியில் நவீன அறுவைச் சிகிச்சை

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சி ராயல் போ்ல் மருத்துவமனையில் நவீன அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளாா். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ரஹீம்யாா்கான் நகா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க