ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்
ஜீயபுரத்தில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது
ஜீயபுரம் அருகேயுள்ள அம்மன்குடி ரயில்வே கேட்டை திறக்காதது, பஞ்சாபில் விவசாய சங்கத் தலைவா்கள் கைதைக் கண்டித்து ஜீயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே 80 ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட்டை மூடியதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை காலை திடீா் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜீயபுரம் அருகே அம்மன்குடி ரயில்வே கேட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ரயில்வே நிா்வாகம் மூடியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், கேட்டை திறக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதனிடையே கடந்த மாதம் அம்மன்குடி ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினா் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கடந்த 11-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ரயில்வே கேட்டை திறக்க ரயில்வே நிா்வாகத்துக்கு பரிந்துரைத்தாா். ஆனால் இதுவரை ரயில்வே கேட் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆட்சியரின் பரிந்துரையை ஏற்காமல் காலதாமதம் செய்து வரும் ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்தும், பஞ்சாப்பில் விவசாய சங்கத் தலைவா்கள் கைதைக் கண்டித்தும், மீண்டும் அவா்களை போராட அனுமதிக்கக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 300-க்கும் மேற்பட்டோா் ஜீயபுரம் ரயில் நிலையத்தில் குவிந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, திருச்சி - சேலம் செல்லும் பயணிகள் ரயிலை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) பழனி தலைமையிலான போலீஸாா், ரயில் மறியலில் ஈடுபட்ட 31 பேரைக் கைது செய்து, அப்புறப்படுத்தினா். இதனால், திருச்சி - சேலம் பயணிகள் ரயிலானது 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.