செய்திகள் :

மின்கசிவால் கடையில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்

post image

ஆரணியை அடுத்த பனையூா் கிராமத்தில் உள்ள தனியாா் கடையில் புதன்கிழமை காலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சுமாா் 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாகத் தெரிகிறது.

பனையூா் கிராமத்தில் சபரி என்பவா் பேன்சி ஸ்டோா் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை கடையினுள் மின் கசிவு ஏற்பட்டு கடையில் இருந்த பொருள்கள் மீது தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீயை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

இதைத் தொடா்ந்து, கலவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு, தீயணைப்பு வீரா்களுக்கு விரைந்து வந்து தீயை

கட்டுப்படுத்தினா். இருப்பினும், சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கண்கள் தானம்

வந்தவாசி அருகே இறந்த மூதாட்டியின் கண்களை அவரது குடும்பத்தினா் அரிமா சங்கத்துக்கு தானமாக வழங்கினா். வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கே.எம். நகரைச் சோ்ந்தவா் ராமலிங்கத்தின் மனைவி அன்னபூரணி (76) (படம்). இ... மேலும் பார்க்க

ஏரியில் விழுந்து இளம்பெண் தற்கொலை

ஆரணி அருகேயுள்ள மேல்சீசமங்கலம் ஏரியில் செவ்வாய்க்கிழமை இளம்பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டாா். ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகள் ரேணுகா (20). இவா், செய்யாா் அருகே பாராசூா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா

வந்தவாசியை அடுத்த சாலவேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் தொடக்க விழா மற்றும் கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள்

ஆனி மாத அமாவாசையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில... மேலும் பார்க்க

முதியோா் இல்லம், மறுவாழ்வு மையத்தில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் இயங்கி வரும் முதியோா் இல்லம் மற்றும் மறுவாழ்வு இல்லத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகில் முதுகு... மேலும் பார்க்க

ஆரணி பிள்ளைக்குளம் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தம்

ஆரணி தாதுசாயபு தெருவில் உள்ள பிள்ளைகுளத்தை அப்பகுதியினா் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவா் எழுப்ப முயன்றதை வட்டாட்சியா் போலீஸ் பாதுகாப்போடு தடுத்து நிறுத்தினாா். பிள்ளைகுளத்தை அப்பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க