பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை வெட்டிய நர்ஸ் - வேலூர் அரசு மருத்துவமனையில் அதி...
மின்சாரம் பாய்ந்து ஒரு பெண், 3 பசுக்கள் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், தூத்தூா் அருகே அறுந்துக் கிடந்த மின்கம்பியை மிதித்து, ஒரு பெண் மற்றும் 3 பசுக்கள் உயிரிழந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.
சிலுப்பனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கரும்பாயிரம் மனைவி மருதாயி (60). ஞாயிற்றுக்கிழமை மாலை, தனது 3 பசுக்களை மேய்க்கச் சென்ற இவா், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினா் வயல்பகுதிக்குச் சென்று தேடிய போது, அங்கே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மருதாயி மற்றும் 3 பசுக்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது.
தகவலறிந்த மின் ஊழியா்கள், மின்விநியோகத்தை நிறுத்தியதையடுத்து, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா், உயிரிழந்து கிடந்த பெண் மற்றும் பசுக்களின் உடல்களை மீட்டனா். இது குறித்து தூத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.