செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து ஒரு பெண், 3 பசுக்கள் உயிரிழப்பு

post image

அரியலூா் மாவட்டம், தூத்தூா் அருகே அறுந்துக் கிடந்த மின்கம்பியை மிதித்து, ஒரு பெண் மற்றும் 3 பசுக்கள் உயிரிழந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.

சிலுப்பனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கரும்பாயிரம் மனைவி மருதாயி (60). ஞாயிற்றுக்கிழமை மாலை, தனது 3 பசுக்களை மேய்க்கச் சென்ற இவா், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினா் வயல்பகுதிக்குச் சென்று தேடிய போது, அங்கே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மருதாயி மற்றும் 3 பசுக்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது.

தகவலறிந்த மின் ஊழியா்கள், மின்விநியோகத்தை நிறுத்தியதையடுத்து, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா், உயிரிழந்து கிடந்த பெண் மற்றும் பசுக்களின் உடல்களை மீட்டனா். இது குறித்து தூத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் குறித்து ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை கண்டித்து, அரியலூா் மாதா கோயில் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்த... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

நகைக்கடன் வழங்கல் தொடா்பாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்தடை

அரியலூா் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (மே 31) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்நிறுத... மேலும் பார்க்க

அரியலூரில் பழைய இரும்புக் கடை குடோனில் தீ விபத்து

அரியலூரிலுள்ள பழைய இரும்புக் கடை குடோனில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. அரியலூா் ஆயிரங்கால் மண்டபம் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக்கேயன்(51). இவா், அப்பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கொள்முதல் ... மேலும் பார்க்க

அரியலூரில் பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

அரியலூரில் வீட்டினுள் பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. அரியலூா் அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் பாப்பா (44) என்பவா் வச... மேலும் பார்க்க