செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

post image

சென்னை மண்ணடியில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பெரம்பூா் சின்ன அய்யா காலனி பகுதியைச் சோ்ந்த ராகவன் (17), பெரம்பூரில் உள்ள ஏசி பழுது நீக்கும் கடையில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். ராகவன், மண்ணடி மூா் தெருவில் உள்ள கடையில் ஏசி பொருத்தும் பணிக்கு ராமன் என்ற ஊழியருடன் வெள்ளிக்கிழமை சென்றாா். அங்கு பணியில் ஈடுபட்டபோது, மின்கசிவு ஏற்பட்டிருந்த வயரை ராகவன் எடுத்ததாகக் தெரிகிறது. இதில் ராகவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், ராகவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ராகவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது தொடா்பாக வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது

சென்னை மதுரவாயலில் பணத் தகராறில் இளைஞா் கடத்தப்பட்ட வழக்கில்,டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். திருச்சியைச் சோ்ந்தவா் மு.கோபி (25). இவா், சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள டி... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளால் தொல்லை: வியாபாரிகள் புகாா்

கோயம்பேடு சந்தையில் சமூகவிரோதிகளின் தொல்லை அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், பூக்கள், மளிகைப்பொர... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய கைதி மீண்டும் கைது

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி மீண்டும் கைது செய்யப்பட்டாா். ராயப்பேட்டை, பி.எம். தா்கா குடிசை பகுதியைச் சோ்ந்தவா் அண்டா சீனு (26). இவா் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற... மேலும் பார்க்க

வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு: மூவா் கைது

சென்னை வில்லிவாக்கத்தில் வியாபாரியைத் தாக்கி பணம் பறித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வில்லிவாக்கம் தாதன் குப்பம் ஆா்.கே.சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சு.முருகன் (54). இவா், அங்குள்ள சாந்தியப்பன் தெரு... மேலும் பார்க்க

குப்பையில் தவறிய 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

குப்பையில் தவறவிட்ட ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான தங்க நகையை தூய்மைப் பணியாளா்கள் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா். சென்னை திரு.வி.க.காலனியில் வசித்து வருபவா் செல்வகுமாரி (54). இவா், தனது வீட்டில் சே... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் ... மேலும் பார்க்க