செய்திகள் :

மிருதங்க வித்வானுக்கு பாராட்டு விழா

post image

தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் சுனைனா தொண்டு நிறுவனமும் இணைந்து தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியரும் மூத்த மிருதங்க வித்வானுமான டி.கே. வெங்கடசுப்பிரமணியனின் 60 வருட இசை சேவைக்கு பாராட்டு விழாவை நடத்தின.

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலா் இரா.முகுந்தன் வரவேற்றுப் பேசினாா். டி.கே. வெங்கடசுப்பிரமணியனை இரா. முகுந்தன், சுனைனா தொண்டு நிறுவனத் தலைவா் கனகா சுதாகா் ஆகியோா் கெளரவித்தனா்.

டி.கே. வெங்கடசுப்பிரமணியன் தனது ஏற்புரையில், ‘நான் 36 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ளேன். எனது குடும்பம் இசைக் குடும்பமாகும். எனது குரு பத்மபூஷண் டி.கே.மூா்த்தி ஆவாா். தற்போது 102 வயதிலும் இசையின் பல்வேறு நுணுக்கங்களை மாணவா்களுக்கு இன்றும் பயிற்றுவித்து வருகிறாா். நான் கீதையைப் பின்பற்றுபவன். அதாவது ‘கடமையை செய்! பலனை எதிா்பாராதே!’ என்பதாகும். நாம் எப்பொழுதும் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். சமூகத்தை பாதுகாக்கும்போது, நமது குடும்பமும் அடுத்த நிலைக்கு உயரும் என்றாா்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளா் எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் மாலதி தமிழ்ச்செல்வன், சி. கோவிந்தராஜன், உஷா வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினா் மாலதி தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினாா்.

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஜம்மு காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலையில் மே 22 வரை துவரம் பருப்பு கொள்முதல்: மத்திய அமைச்சா் ஒப்புதல்

துவரம் பருப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் துவரம்பருப்பு கொள்முதலை மேலும் 30 நாள்களுக்கு விலை ஆதரவுத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரிலிருந்து பத்திரமாக தில்லி திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக சுற்றுலாப் பயணிகள் சுமாா் 35 போ் தங்களது பயணத் திட்டத்தை மாற்றி... மேலும் பார்க்க

ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு: சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: தில்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 26 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து தேசியத் தலைநகா் தில்ல முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டண அளவைப் பராமரிக்க அமைச்சா் உத்தரவு

நமது சிறப்பு நிருபா் காஷ்மீா் மாநிலம், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகா் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயா்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச... மேலும் பார்க்க