செய்திகள் :

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மகா. அமைச்சர்; முதல் மனைவியை மறைத்த விவகாரத்தில் நீதிமன்றம் நோட்டீஸ்

post image

மகாராஷ்டிரா சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் தனஞ்சே முண்டே. இவர் துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த சில மாதங்களாகத் தனஞ்சே முண்டே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் பீட் மாவட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர் சந்தோஷ் தேஷ்முக் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தனஞ்சே முண்டேயின் தீவிர ஆதரவாளர் வால்மிக் கராட் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தனஞ்சே முண்டேயை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அஜித்பவார் அக்கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

தனஞ்சே முண்டேயிக்கு இரண்டு மனைவியாகும். முதல் மனைவி கருணா முண்டே அவரை விட்டுப் பிரிந்து குழந்தையோடு தனித்து வாழ்கிறார். தனஞ்சே முண்டே மீது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே புகார் செய்திருக்கிறார். சமீபத்தில் கருணா முண்டே மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குடும்ப வன்முறை தொடர்பான மனுவை விசாரித்த குடும்ப நீதிமன்றம் தனஞ்சே முண்டே மாதம் 2 லட்சம் ரூபாய் கருணா முண்டேயிக்கு வழங்க உத்தரவிட்டு இருந்தது.

இது நடந்து சில நாட்களே ஆன நிலையில் கருணா முண்டே மூலம் தனஞ்சே முண்டேயிக்கு மேலும் ஒரு சிக்கல் வந்திருக்கிறது. தனஞ்சே முண்டே தனது தேர்தல் விண்ணப்பத்தில் தனது மனைவி ராஜ்ஸ்ரீ என்றும், தனக்கு 3 குழந்தைகள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். முதல் மனைவி குறித்தோ அல்லது அவரது சொத்து குறித்தோ எதுவும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்.

கருணா முண்டே

இது தொடர்பாகக் கருணா முண்டே தனது வழக்கறிஞர் சந்திரகாந்த் மூலம் ஆன்லைனில் புகார் செய்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 33 (A) (I) மற்றும் 125A ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மட்டுமல்லாது நேரடியாகவும் கருணா முண்டே பார்லி நீதிமன்றத்தில் புகாரைத் தாக்கல் செய்துள்ளார். அதனை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து தனஞ்சே முண்டேயிக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கு விசாரணை இம்மாதம் 24ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தனஞ்சே முண்டேயிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Manipur: அமைதி திரும்புமா... ஒன்றரை ஆண்டாக ஓயாத வன்முறைக்கு நடுவே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

மணிப்பூரில் கடந்த 2023-ல், மெய்தி இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணியில், 2023 மே மாதம் மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்களுக்கு இடையே... மேலும் பார்க்க

"ஆர்.பி.உதயகுமார் எப்போதும் காமெடி செய்து கொண்டே இருப்பார்" - டி.டி.வி.தினகரன் கிண்டல்

தேனி மாவட்டம் சின்னமனூரில் அ.ம.மு.க தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அ.ம.மு.க ... மேலும் பார்க்க

New Income Tax Bill: "புதிய வருமான வரி மசோதா என்றால் SIMPLE" - நிதியமைச்சர் சொல்வதென்ன?

இன்று நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இது 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக இது அறிமுகப்படுத்த... மேலும் பார்க்க

``கலைஞரிடமிருந்து வந்த அழைப்பு; மனைவி தந்த தைரியம்"- காதலைப் பகிரும் தங்கம் தென்னரசு

தலைவர்களின் புகைப்படங்கள், கட்சிக்கொடி, பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள், நினைவுப்பரிசுகள் என அரசியல்வாதி வீடுகளின் அக்மார்க் சின்னங்களுக்கு நடுவே வீடு முழுவதும் சிரிப்புச்சத்தத்தை எதிரொலிக்கிறது நிதி... மேலும் பார்க்க

BJP: "ஜெயக்குமார் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்; இல்லையென்றால்..." - கரு.நாகராஜன் பேட்டி

"திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி என்கிறார்களே, தி.மு.க-வினர்?""தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமாகவே நடத்தப்பட்டது. மக்களுக்குப் பரிசுப் பொருட்கள் க... மேலும் பார்க்க