செய்திகள் :

Manipur: அமைதி திரும்புமா... ஒன்றரை ஆண்டாக ஓயாத வன்முறைக்கு நடுவே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

post image

மணிப்பூரில் கடந்த 2023-ல், மெய்தி இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணியில், 2023 மே மாதம் மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்த வன்முறைத் தீ அணையாமல் இன்றும் எரிந்துகொண்டே இருக்கிறது. மத்தியில், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு வன்முறையை இன்னும் கட்டுக்குள் கொண்டுவராமல் இருக்கிறது.

மோடி | MANIPUR

இதுநாள் வரையிலும் மணிப்பூருக்கு நேரில் செல்லாத பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளின் நெருக்கடியால் ஒரேயொருமுறை மட்டும் மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். அதேபோல், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவராமல் வேடிக்கை பார்க்கும் மாநில முதல்வர் பிரேன் சிங் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதெல்லாம் அவர் மவுனம் காத்துவந்தார்.

இவ்வாறிருக்க, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 174(1)-ன்படி, கடைசியாக சட்டமன்ற அமர்வு கூடி ஆறு மாதங்களுக்குள் அடுத்த அமர்வு கூட்ட வேண்டும் (மணிப்பூரில் கடைசியாக 2024 ஆகஸ்ட் 12-ல் சட்டமன்றம் கூடியிருந்தது) என்ற நிலையில், கடந்த ஞாயிறு அன்று திடீரென முதல்வர் பதவியிலிருந்து பிரேன் சிங் விலகினார். பிரேன் சிங்கின் இந்த முடிவு பா.ஜ.க-வைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டது என்றும், மணிப்பூர் மக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல என்றும் காங்கிரஸ் விமர்சித்தது.

பிரேன் ராஜினாமா செய்த அடுத்த நாளே, பட்ஜெட் கூட்டத்தொடரை ஆளுநர் அஜய் பல்லா ரத்து செய்தார். மாநிலத்தில் கடைசியாக சட்டமன்றம் கூடி நேற்றோடு ஆறு மாதங்களும் முடிவடைந்தது. இந்த நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி தற்போது அமலுக்கு வந்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

"ஆர்.பி.உதயகுமார் எப்போதும் காமெடி செய்து கொண்டே இருப்பார்" - டி.டி.வி.தினகரன் கிண்டல்

தேனி மாவட்டம் சின்னமனூரில் அ.ம.மு.க தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அ.ம.மு.க ... மேலும் பார்க்க

New Income Tax Bill: "புதிய வருமான வரி மசோதா என்றால் SIMPLE" - நிதியமைச்சர் சொல்வதென்ன?

இன்று நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. இது 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக இது அறிமுகப்படுத்த... மேலும் பார்க்க

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மகா. அமைச்சர்; முதல் மனைவியை மறைத்த விவகாரத்தில் நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் தனஞ்சே முண்டே. இவர் துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த சில மாதங்களாகத் த... மேலும் பார்க்க

``கலைஞரிடமிருந்து வந்த அழைப்பு; மனைவி தந்த தைரியம்"- காதலைப் பகிரும் தங்கம் தென்னரசு

தலைவர்களின் புகைப்படங்கள், கட்சிக்கொடி, பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள், நினைவுப்பரிசுகள் என அரசியல்வாதி வீடுகளின் அக்மார்க் சின்னங்களுக்கு நடுவே வீடு முழுவதும் சிரிப்புச்சத்தத்தை எதிரொலிக்கிறது நிதி... மேலும் பார்க்க

BJP: "ஜெயக்குமார் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்; இல்லையென்றால்..." - கரு.நாகராஜன் பேட்டி

"திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி என்கிறார்களே, தி.மு.க-வினர்?""தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமாகவே நடத்தப்பட்டது. மக்களுக்குப் பரிசுப் பொருட்கள் க... மேலும் பார்க்க