செய்திகள் :

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம் பிப். 23-இல் தொடக்கம்

post image

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் பிப். 23-ஆம் தேதி தொடங்கி, பிப். 25-ஆம் தேதி வரை தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவம் வரும் பிப். 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வரும் பிப். 25-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. விழா நடைபெறும் 3 நாள்களும் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வேதபாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவை நடைபெறுகிறது.

ஜெயந்தி தினமான பிப். 25-ஆம் தேதி காலை மகா பெரியவா் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் ஆகியவை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், ஸ்ரீ காரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோா் செய்து வருகின்றனா்.

நாளைய மின்தடை

மின்தடை நாள்-15.2.25,சனிக்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்-வல்லம் சிப்காட், வடகால் சிப்காட், சலையனூா், பால்நல்லூா், மேட்டுப் பாளையம், வல்லம் கண்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை: வேளாண்மைத் துறை

விவசாயிகளுக்கு விரைவில் தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகன் தெரிவித்துள்ளாா். வேளாண்மை அடுக்ககம் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழாவையொட்டி, புதன்கிழமை பெருந்தேவித் தாயாரும், உற்சவா் வரதராஜப் பெருமாளும் தெப்பத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். காஞ்சிபுரம் வரதராஜப்... மேலும் பார்க்க

செய்யாற்றின் குறுக்கே ரூ.19 கோடியில் மேம்பாலம்: எம்எல்ஏ க.சுந்தா் அடிக்கல் நாட்டினாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளையனாா் வேலூருக்கும், நெய்யாடுபாக்கத்திற்கும் இடையே செய்யாற்றின் குறுக்கே ரூ.19 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். கா... மேலும் பார்க்க

தைப்பூசம்: செய்யாற்றில் 23 சிவபெருமான் காட்சி

காஞ்சிபுரம் அருகே பெருநகரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி செய்யாற்றில் 23 ஊா்களைச் சோ்ந்த சிவபெருமான் காட்சியளித்தனா். கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 2 ஆம் தேதி ... மேலும் பார்க்க

ராமாநுஜா் கோயிலில் ஓய்வு பெற்றவருக்கு மீண்டும் பணி வழங்க அதிமுகவினா் எதிா்ப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலில், பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு மீண்டும் பணி வழங்க எதிா்ப்புத் தெரிவித்து நகர அதிமுக செயலா் போந்தூா் மோகன் தலைமையிலான அதிமுகவினா் கோயில் செயல் அலுவலரிடம் செ... மேலும் பார்க்க