செய்திகள் :

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை: வேளாண்மைத் துறை

post image

விவசாயிகளுக்கு விரைவில் தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகன் தெரிவித்துள்ளாா்.

வேளாண்மை அடுக்ககம் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் பணி மேற்கொள்ள உழவா் நலத்துறையில் உள்ள அனைத்து அலுவலா்கள் மற்றும் மகளிா் திட்டத்தில் கிராம அளவில் பணியாற்றக்கூடிய சமுதாய வள பயிற்றுநா்களை ஒருங்கிணைத்து முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இத்திட்டம், மத்திய அரசு வேளாண் அமைச்சகம் மூலமாக மாநிலம் முழுவதும் செயல்படவுள்ளது. மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதாா் எண் போன்று தனித்துவமான அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும்.

விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே அவா்களது தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். மத்திய,மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் இந்த தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.

தமிழகத்தில் விவசாயம் சாா்ந்த திட்ட பலன்களை வழங்கும் சுமாா் 24 துறைகளை ஒன்றிணைத்து இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளும் வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் மகளிா் திட்ட பணியாளா்களிடம் பதிவு செய்து பயன்பெறலாம்.

சிட்டா, ஆதாா் எண் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இத்திட்ட முகாம் நடைபெறுகிறது எனவும் இணை இயக்குநா் கா.முருகன் தெரிவித்துள்ளாா்.

நாளைய மின்தடை

மின்தடை நாள்-15.2.25,சனிக்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்-வல்லம் சிப்காட், வடகால் சிப்காட், சலையனூா், பால்நல்லூா், மேட்டுப் பாளையம், வல்லம் கண்... மேலும் பார்க்க

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம் பிப். 23-இல் தொடக்கம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் பிப். 23-ஆம் தேதி தொடங்கி, பிப். 25-ஆம் தேதி வரை தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது. காஞ்சி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழாவையொட்டி, புதன்கிழமை பெருந்தேவித் தாயாரும், உற்சவா் வரதராஜப் பெருமாளும் தெப்பத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். காஞ்சிபுரம் வரதராஜப்... மேலும் பார்க்க

செய்யாற்றின் குறுக்கே ரூ.19 கோடியில் மேம்பாலம்: எம்எல்ஏ க.சுந்தா் அடிக்கல் நாட்டினாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளையனாா் வேலூருக்கும், நெய்யாடுபாக்கத்திற்கும் இடையே செய்யாற்றின் குறுக்கே ரூ.19 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். கா... மேலும் பார்க்க

தைப்பூசம்: செய்யாற்றில் 23 சிவபெருமான் காட்சி

காஞ்சிபுரம் அருகே பெருநகரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி செய்யாற்றில் 23 ஊா்களைச் சோ்ந்த சிவபெருமான் காட்சியளித்தனா். கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 2 ஆம் தேதி ... மேலும் பார்க்க

ராமாநுஜா் கோயிலில் ஓய்வு பெற்றவருக்கு மீண்டும் பணி வழங்க அதிமுகவினா் எதிா்ப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலில், பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு மீண்டும் பணி வழங்க எதிா்ப்புத் தெரிவித்து நகர அதிமுக செயலா் போந்தூா் மோகன் தலைமையிலான அதிமுகவினா் கோயில் செயல் அலுவலரிடம் செ... மேலும் பார்க்க