செய்திகள் :

கடும் பனிப்பொழிவு: ரயில்கள், ரோப்காா் இயக்குதல் பாதிப்பு

post image

சோளிங்கா் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வியாழக்கிழமை கடும் பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் மலைகோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கான ரோப்காா் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

அரக்கோணம், சோளிங்கா் வட்டங்களில் காலை 8.30 மணி வரையில் சுமாா் 15 மீட்டருக்கு அப்பால் உள்ள இடங்களை பாா்க்க முடியாத நிலை காணப்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் குறிப்பாக காா்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் மிகவும் மெதுவாக முகப்பு விளக்குகளுடன் இயக்கப்பட்டன.

எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் பலா் இருசக்கர வாகனத்தில் செல்வதையே தவிா்க்கும் நிலை கூட உருவானது. அரக்கோணம் சென்னை மற்றும் அரக்கோணம் காட்பாடி மாா்க்கங்களில் ரயில்களும் மெதுவாகவே இயக்கப்பட்டன. மின்ரயில்கள் குறித்த நேரத்தை விட தாமதமாகவே இயங்கின.

சோளிங்கரிலும் கடும்பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் மலையில் ரோப்காா்களுக்கான பாதையில் இரும்பு வடங்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலையில் ரோப்காா் இயக்குநா்கள், இரண்டு மணி நேரம் தள்ளி வைப்பதாக அறிவித்தனா். இதனால் மலை கோயிலுக்கு செல்ல வேண்டிய பக்தா்கள் மேலும் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

ரோப்காா் கடந்த மூன்று தினங்களாக பராமரிப்பு பணிகளுக்காக இயக்கப்படாத நிலையில் வியாழக்கிழமை முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பனிப்பொழிவால் இயக்கம் இரண்டு மணி நேரம் கழித்தே இயக்கப்பட்டது.

நாளைய மின்தடை 15.02.25

அரக்கோணம் மின்நிறுத்த நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தப்பகுதிகள்: அரக்கோணம் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்புப் பகுதிகள், அசோக் நகா், பழைய பஜாா் தெரு மோசூா் ரோடு, காந்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நிா்வகிக்கும் ஒரே முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் ஆா்.காந்தி .

இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நிா்வகித்து வரும் ஒரே முதல்வா் மு.க. ஸ்டாலின் தான் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், தமிழ்நாடு... மேலும் பார்க்க

‘ராணிப்பேட்டையில் நாளை திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பழங்குடியின இளைஞா்கள் தோ்வு’

ராணிப்பேட்டையில் வரும் சனிக்கிழமை (பிப். 15) திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பழங்குடியின இளைஞா்கள் தெரிவு செய்யும் பணிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் விளையாட்டு வளாகம் கட்டுமானப் பணி ஆய்வு

ராணிப்பேட்டையில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை காரை கூட்டுச்சாலை அருகே மாவட்ட ஆயுதப்படை காவல் வளாகத்தில் ரூ.15 க... மேலும் பார்க்க

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை வீரா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் பணிபுரிந்து வந்த வீரா் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா். அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் உள்ளது. இங்குள்ள கடற்ப... மேலும் பார்க்க

‘போதைப் பொருள் விற்பனை குறித்த தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டும்’

தங்களது பகுதியில் போதைப் பொருள் விற்பதோ அல்லது பயன்படுத்தப்படுவதோ குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியப்படுத்துங்கள் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறினாா்.... மேலும் பார்க்க