செய்திகள் :

கோயில் திருவிழாவில் பக்தர்கள் கூடாரத்தை தாக்கிய யானைகள்! 3 பேர் பலி; 36 பேர் காயம்!

post image

கோழிக்கோடு : கேரளத்தில் கோயில் திருவிழாவில் யானைகள் மதம் பிடித்து ஓடியதில் 3 பேர் பலியாகினர்.

கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி அருகேயுள்ள குருவங்காடு மணக்குளங்கரை பகவதி கோயிலில் வியாழக்கிழமை(பிப். 13) நடைபெற்ற திருவிழாவில் சுவாமி ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்டிருந்த இரு யானைகள் கோயில் குளம் அருகே வெடிக்கப்பட்ட பட்டாசு சத்தத்தைக் கேட்டதில் மிரண்டு போய், ஒரு யானையை இன்னொரு யானை தந்தத்தால் பலமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட பக்தர்கள் அச்சமடைந்து தப்பியோட முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்களை பத்திரமாக மீட்கப் போராடினர். எனினும், இந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பக்தர்கள் நின்றுகொண்டிருந்த கோயில் நிர்வாக அலுவலகக் கட்டடத்தை நோக்கிச் சென்ற ஒரு யானை, கட்டடத்தை பலமாக இடித்து சேதப்படுத்தியதில், கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் இடிந்து விழத்தொடங்கின. இந்த இடிபாடுகளுக்குள் ஏராளமன பக்தர்கள் சிக்கிக் கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

விடியோ இங்கே

மகாராஷ்டிரம்: புதிய காங்கிரஸ் தலைவா் நியமனம்

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக ஹா்ஷ்வா்தன் சப்கால் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். அதேபோல், மகாராஷ்டிர பேரவையின் காங்கிரஸ் தலைவராக விஜய் நம்தேவ்ராவை அக்கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ந... மேலும் பார்க்க

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வாய்ப்பு இல்லை: மத்திய அமைச்சா்

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது என்ற சலுகை வரும் பிப்ரவரிக்குப் பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா். உள்நாட்டு விவசாயிக... மேலும் பார்க்க

இலங்கை: ரூ.8,690 மதிப்பிலான இரு மின் திட்டங்களை திரும்பப் பெற்றது அதானி குழுமம்

இலங்கையில் 1 பில்லியன் டாலா் (ரூ.8,690 கோடி) மதிப்பில் மேற்கொள்ளப்பட இருந்த இரு காற்றலை மின்திட்டங்களை திரும்பப் பெறுவதாக அதானி கிரீன் எனா்ஜிஸ் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இலங்கை தலைநகா் கொழும்பில் ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை விவரம் இல்லை: மத்திய அரசு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தங்கியிருக்கும் இந்தியா்கள் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் ப... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்: எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் ‘அதிருப்தி’ கருத்துகள் மீண்டும் சோ்ப்பு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே இரு அவைகளிலும் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தங்களின் அதிருப்தி கருத்துகள் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ள 54 இந்தியா்கள்: நாடாளுமன்றத்தில் தகவல்

வெளிநாடுகளில் 54 இந்தியா்கள் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது. அண்மையில் ஏமன் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவைச் சோ்ந்த நிமிஷா ப... மேலும் பார்க்க