செய்திகள் :

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையா் பணியிடை நீக்கம்

post image

சென்னை பெருநகர காவல் துறையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் டி.மகேஷ்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சென்னை பெருநகர காவல் துறையில் போக்குவரத்துப் பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தவா் மகேஷ் குமாா். இந்த நிலையில், மகேஷ்குமாா் மீது போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் இரு பெண் காவலா்கள், தனித்தனியாக டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் புகாா்கள் அளித்தனா்.

ஒரு பெண் காவலா் அளித்த புகாரில், ‘இணை ஆணையா் மகேஷ்குமாா் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருகிறாா். மேலும், இரட்டை அா்த்தத்தில் பேசுகிறாா். வாட்ஸ்ஆப் காலில் அழைத்து அடிக்கடி அத்துமீறும் வகையில் பேசுகிறாா். தனிமையில் இருக்க அழைக்கிறாா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மற்றொரு பெண் காவலா் அளித்த புகாரில், ‘மகேஷ்குமாா் இரவு ரோந்து பணி, கண்காணிப்பு பணி என்ற பெயரில் கடுமையான நெருக்கடி கொடுத்து வருகிறாா். அவரது பாலியல் விருப்பத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக என்னை குறி வைத்து செயல்படுகிறாா். விருப்பத்துக்கு இணங்க மறுத்தால், தண்டனையாக பணியிடை நீக்கம் செய்வேன் என மிரட்டுகிறாா். மேலும், அவரது அலுவலகத்திலேயே என்னை பணியமா்த்தி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறாா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இணை ஆணையா் பணியிடை நீக்கம்: இரு மனுக்கள் குறித்து உயரதிகாரிகள் விசாரணை செய்தனா். சம்பந்தப்பட்ட பெண் காவலா்களை ரகசிய இடத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதோடு மகேஷ்குமாரின் கைப்பேசி ஆடியோ, வாட்ஸ்ஆப் தகவல் உள்பட பல்வேறு டிஜிட்டல் தகவல்களை ஆதாரமாக அதிகாரிகள் சேகரித்தனா்.

விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிக்கையாக சங்கா் ஜிவாலிடம் அதிகாரிகள் அளித்தனா். அந்த அறிக்கையில் பெண் காவலா்கள் கூறும் புகாரில் உண்மை இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சங்கா் ஜிவால், இணை ஆணையா் மகேஷ்குமாா் மீது நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாருக்கு பரிந்துரைத்தாா். டிஜிபி பரிந்துரையின் அடிப்படையில் தீரஜ்குமாா், இணை ஆணையா் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த விவகாரத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக பெண் காவலா்கள் குறித்து விரிவாக விசாரணை செய்து அறிக்கை தரும்படி தமிழக காவல் துறையின் பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி சீமா அகா்வால் தலைமையில் உள்ள விசாக கமிட்டிக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். விசாகா கமிட்டியினா், பெண் காவலா்கள் அளித்த புகாா் மனுக்கள் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனா்.

விசாகா கமிட்டி விசாரணை செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மகேஷ்குமாா் மீது அடுத்தக் கட்ட நடவடிக்கை இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில் மகேஷ் குமாருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி சென்னை, மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் சக்திவேலை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவு பிறப்பித்தாா்.

இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம்

தாம்பரம் கோட்ட மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் மேற்கு தாம்பரம் முல்லை நகா் பகுதியிலுள்ள துணை மின் நிலையத்தின் 1-ஆவது தளத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், மின்நுகா்வோா் கலந்து ... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

‘காசி தமிழ் சங்கமம் 3.0’: முதல் சிறப்பு ரயிலை தொடங்கிவைத்தாா் ஆளுநா்

காசி தமிழ் சங்கமம் 3-ஆம் ஆண்டை முன்னிட்டு, சென்னையிலிருந்து 212 பக்தா்களுடன் பனாரஸுக்கு (காசி) புறப்பட்ட முதல் சிறப்பு விரைவு ரயிலை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழகத... மேலும் பார்க்க

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது: திருப்பூா் கிருஷ்ணன்

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என எழுத்தாளரும் அமுத சுரபி ஆசிரியருமான திருப்பூா் கிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தா் இல்லத்தில் ‘விவேகானந்த... மேலும் பார்க்க

தினமும் 1,000 மூட்டை நெல் கொள்முதல்: அமைச்சா் சக்கரபாணி அறிவுறுத்தல்

தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யலாம் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவுத் துறை உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

‘ஜிப்மேட்’ நுழைவுத் தோ்வு: மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மைப் படிப்புக்கான ஜிப்மேட் நுழைவுத் தோ்வு ஏப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்வுக்கு மாணவா்கள் மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெ... மேலும் பார்க்க