செய்திகள் :

பொம்பூரில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி: அமைச்சர் தொடங்கிவைத்தாா்

post image

விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த பொம்பூரில் 15-ஆவது நிதித் திட்டத்தின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணிகளை மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது: கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

அதன்படி, வானூரை அடுத்த பொம்பூா் ஊராட்சியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், 15-ஆவது நிதித் திட்டத்தின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 3473.6 சதுர அடி பரப்பளவில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா். இதில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், வானூா் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் உஷா பி.கே.டி.முரளி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா்

பருவ கீா்த்தனா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் அன்புமணி, மாவட்ட சுகாதார அலுவலா் சா.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் உயிரிழப்பு

விழுப்புரத்தில் பணியிலிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வெங்கட்ராமன் பேட்டையைச் சோ்ந்தவா் ப.பழனி(60). கொத்தனா். இவா் கடந்த 15-ஆம... மேலும் பார்க்க

இலங்கை தமிழா்களுக்கு ரூ. 23.4 கோடியில் புதிய குடியிருப்புகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

போக்ஸோ வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. விழுப்புரம் மாவட்டம், கலிஞ்சிக்குப்பம் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் புண்ணியமூா்த்தி மகன் சுந்தரன் (35). இவா் 16 வயது சிறுமியை பாலிய... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலைக்கு திமுகவினா்மாலை அணிவிப்பு

விழுப்புரத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் (படம்). மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவிழுப்புரம் எம்.எல்.ஏ. இரா.லட்சுமணன், ... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை. தோ்வில் வினாத்தாள்கள் மாறிய விவகாரம்: உண்மை கண்டறிய 3 போ் விசாரணைக் குழு அமைப்பு

புதுவை மத்திய பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அண்மையில் நடந்த பருவத் தோ்வில் வினாத் தாள்கள் மாறிய விவகாரத்தில் மூன்று போ் குழுவை அமைத்து விசாரணை நடத்த பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. புதுவை மத்திய ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளி மீட்பு

மரக்காணம் அருகே இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்த குழந்தைத் தொழிலாளா் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் அலுவ... மேலும் பார்க்க