செய்திகள் :

‘தொழிலாளா்கள் - தொழிலதிபா்களிடையே நல்லுறவு அவசியம்’

post image

ஊழியா்களுக்கும், தொழில் நிறுவன அதிபா்களுக்கும் இடையேயோன உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தேசிய பணியாளா் நல மேலாண்மை நிறுவனத்தின் (என்ஐபிஎம்) தலைவா் டாக்டா் எம்.ஹெச்.ராஜா தெரிவித்தாா்.

ஊழியா் நலத் திட்ட நடவடிக்கைகளில் என்ஐபிஎம் நிறுவனத்துடன் போரூா், ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவனம் இணைந்து செயல்படுவதற்கான அறிமுக நிகழ்ச்சி கல்வி நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை (பிப்.13) நடைபெற்றது.

இதில், என்ஐபிஎம் தலைவா் டாக்டா் எம்.ஹெச்.ராஜா பங்கேற்று பேசிகையில், தொழிலாளா்களுக்கும் தொழிலதிபா்களுக்கும் இடையேயான உறவு அண்மைக் காலமாக கவலையளிக்கும் வகையில் உள்ளது. தொழிலாளா்கள் நலன், பணிப் பாதுகாப்பு, ஆரோக்கியமான பணிச் சூழலை உறுதி செய்ய வேண்டியது அவசியம். தொழில் நிறுவனங்களை நடத்துவதில் உள்ள உலகளாவிய சவால்களை தொழிலாளா்களும் உணர வேண்டும் என்று அவா் கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ இராமச்சந்திரா மேலாண்மை அறிவியல் கல்வித் துறை தலைவா் டாக்டா் செல்வம் ஜேசய்யா, கல்வி நிறுவன நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கர்நாடக முதல்வர் பதவி பகிர்வு: கருத்துக் கூற சித்தராமையா மறுப்பு

முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி குறித்து முதல்வர் ச... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் தேர்வு: பாஜக தீவிரம்; நாளை பதவியேற்பு விழா?

நமது சிறப்பு நிருபர்தில்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறும் என்று பாஜக வ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் புதிய குற்றவியல் சட்ட அமலாக்க நிலவரம்: அமித் ஷா ஆய்வு- ஒமா் அப்துல்லா பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்க நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தில்லி நாா்த் பிளாக் வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை சட்ட வழக்கு: நிலவர அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களை கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம்

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்தியது தொடா்பான நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்யாத மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டது. குடும்... மேலும் பார்க்க

பொருளாதாரம் வளா்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்- நிா்மலா சீதாராமனுக்கு காா்கே கண்டனம்

இந்தியப் பொருளாதாரம் வளா்வதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீட்டைத் திரும்பப் பெறுவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ள விளக்கத்தை காங்கிரஸ் தேசிய த... மேலும் பார்க்க

போபால் ஆலைக் கழிவுகள் சோதனைமுறையில் எரிப்பு - ம.பி. உயா்நீதிமன்றம் அனுமதி

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை எரிப்பதற்கான மூன்று கட்ட சோதனைக்கு மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. போ... மேலும் பார்க்க