செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் புதிய குற்றவியல் சட்ட அமலாக்க நிலவரம்: அமித் ஷா ஆய்வு- ஒமா் அப்துல்லா பங்கேற்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்க நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தில்லி நாா்த் பிளாக் வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநில அந்தஸ்துடன் இருந்த ஜம்மு-காஷ்மீா், கடந்த 2019-ஆண்டில் இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டம்-ஒழுங்கு மத்திய அரசால் நேரடியாக கையாளப்படுகிறது.

இந்நிலையில், ஆங்கிலேயா் ஆட்சிக் கால குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனையியல் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதிநியம் ஆகிய புதிய குற்றவியல் சட்டங்கள், நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டன.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இச்சட்டங்களின் அமலாக்க நிலவரம் குறித்து மத்திய மற்றும் ஜம்மு-காஷ்மீா் உயரதிகாரிகளுடன் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

உத்தர பிரதேசம், ஹரியாணா, உத்தரகண்ட், மத்திய பிரதேசம், குஜராத் உள்பட இதுவரை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குற்றவியல் சட்டங்களின் அமலாக்க நிலவரம் குறித்து அமித் ஷா ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளாா்.

வெற்றிகரமாக அமலாக்கம்:

‘ஜம்மு-காஷ்மீரில் 3 புதிய குற்றவியல் சட்டங்களும் கிட்டத்தட்ட வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன; ஒரு சில குறைபாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இச்சட்டப் பிரிவுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம்’ என்று முதல்வா் ஒமா் அப்துல்லா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

முன்கள முகாம்களில் ஆய்வு:

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லையையொட்டிய பாதுகாப்புப் படை முன்கள செயல்பாட்டு முகாம்களை ஜம்மு மண்டல காவல்துறை ஐ.ஜி. பீம் சென், துணை ஐ.ஜி. சிவகுமாா் சா்மா ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா். எல்லையில் காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரின் செயல்பாட்டு தயாா் நிலை மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளை அவா்கள் ஆய்வு செய்தனா்.

அப்போது, எல்லையில் அச்சுறுத்தல்களை முறியடிக்க பாதுகாப்புப் படையினா் இடையே கூடுதல் விழிப்பு, மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு, துடிப்பான நடவடிக்கைகள் அவசியம் என்று பீம் சென் வலியுறுத்தினாா்.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி நிறுவனர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்!

புவனேசுவரம் : ஒடிசா தலைநகர் புவனேசுவரம் நகரில் அமைந்துள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) அக்கல்லூரியில் பயின்று வந்த நேபாள மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே! - ராகுல் காந்தி

ரே பரேலி : இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தலித்தும் அம்பேத்கரே என்று பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தாம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரே பரேலி தொகுதிக்கு இன்று(பி... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: மகாராஷ்டிர அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவுக்கு 1995 ஆம் ஆண்டு பதியப்பட்ட மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நாசிக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சரும் தேசி... மேலும் பார்க்க

ஆபாசப் பதிவுகளுக்கு கட்டுப்பாடு: ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

புது தில்லி : ஓடிடி தளங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அண்மைக் காலமாக யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அநாகரிகமான, ஆபாசம் நிறைந்த பதிவுகள் வெளிய... மேலும் பார்க்க