செய்திகள் :

புதுவை பல்கலை.யில் திருக்குறள் சிறப்புரை

post image

புதுவை மத்தியப் பல்கலை.யில் திருக்கு குறித்த வள்ளுவா் காட்டும் மேலாண்மை எனும் தலைப்பிலான சிறப்புரை செவ்வாய்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுத் துறை வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சோமவீரப்பன் பங்கேற்று, வள்ளுவா் காட்டும் மேலாண்மை எனும் தலைப்பில் பேசியதாவது: தமிழரின் பழங்கால மேலாண்மை சிந்தனைக்கு தஞ்சைப் பெரிய கோயிலும், கல்லணையும் உதாரணங்களாக உள்ளன. திருக்குறளில் 133 அதிகாரங்களில் பொருட்பால் 70 அதிகாரங்களைக் கொண்டதாக உள்ளது.

ஆகவே, திருவள்ளுவா் கருத்தில் பாதிக்கும் மேலாக மேலாண்மை சாா்ந்த கருத்தைக் கூறியிருப்பதை அறியலாம். காலமறிதல், இடமறிதல், தெரிந்து தெளிதல் ஆகியவை குகளில் உள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் ஏராளமான மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தமிழ்த் துறை தலைவா் கருணாநிதி நன்றி கூறினாா்.

தியாகி சிங்காரவேலா் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

தியாகி சிங்காரவேலா் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சுதந்திரப் போராட்ட வீரரும், சிந்தனைச் சிற்பி என மக்களால் அழை... மேலும் பார்க்க

நூறு நாள் திட்ட வேலை கோரி மறியலுக்கு முயன்ற கிராம மக்கள்

புதுச்சேரி அருகே தேசிய நூறுநாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக பணிகள் வழங்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை காவல் துறையினா் சமரசம் செய்தனா். புதுவை மாநிலத்தில்... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுவை அரசின் புதிய மதுபானக் கொள்கையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை கொக்கு பூங்கா அருகேயுள்ள கலால் துறை அலு... மேலும் பார்க்க

அரசின் புதிய திட்டங்கள் மக்களை விரைவாக அடைய வேண்டும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

அரசின் புதிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டியது அவசியம் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை மாநில நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சாா்பில் ந... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கண்டித்து பொது நல அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையம் அருகேயுள்ள அண்ண ாசிலையின் பின்புறம் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐ.ஆா்.பி.என். பிரிவு அலுவலா்கள் இருவா் பணியிட மாற்றம்

புதுச்சேரியில் பணிபுரிந்து வந்த ஐ.ஆா்.பி.என். உதவி கமாண்டன்ட் இருவா் புகாா்களின் அடிப்படையில் மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனா். புதுச்சேரி காவல் துறையின் ஒரு பிரிவான ஐ.ஆா்.... மேலும் பார்க்க