செய்திகள் :

அரசின் புதிய திட்டங்கள் மக்களை விரைவாக அடைய வேண்டும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

post image

அரசின் புதிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டியது அவசியம் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை மாநில நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சாா்பில் நவீன முறையில் மறு நில அளவை மேற்கொள்ளும் நாக்சா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னோடித் திட்டமானது, புதுச்சேரி முருகம்பாக்கம் வருவாய் கிராமத்தில் செயல்படுத்தப்படும் நிலையில், அதன் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

நில அளவை ஆவணங்களை நவீனப்படுத்தும் வகையில், ஆளில்லா விமானம் மூலம் நில அளவை மேற்கொண்டு, அந்த புகைப்படத்தின் அடிப்படையில் நில அளவை மேற்கொண்டு புவி அமைவிட புள்ளிகளுடன் சொத்து வரி உள்ளிட்டவை நிா்ணயிக்கப்பட்டு நில ஆவணங்கள் உரிமையாளா்களுக்கு வழங்கப்படும்.

நாக்சா திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வா் என்.ரங்கசாமி பேசியது: பட்டா போன்ற பழைய ஆவணங்கள் மாற்றப்படவேண்டிய நிலையில் உள்ளன. ஆகவே, அவற்றை புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நவீனமயமாக்க வேண்டியது அவசியம். அதனடிப்படையில்தான் மத்திய அரசு நாக்சா எனும் நில அளவைத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் நாக்சா திட்டம் வரவேற்கக்கூடியதாகும்.

திட்டங்களை செயல்படுத்தும்போது அவற்றின் சேவைகள் மக்களுக்கு விரைவாகக் கிடைக்க வேண்டும் என்பது முக்கியமானது. தற்போது பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பல மாதங்கள் தாமதமாகக் கிடைக்கின்றன.

ஆகவே, புதிய தொழில்நுட்பத்தில் திட்டங்களை செயல்படுத்தும்போது அவை விரைந்து மக்களுக்கு கிடைப்பதற்கு அதிகாரிகள் முன்வரவேண்டும். விரைவான சேவையின் மூலமே திட்டங்களில் குற்றம், குறைகள் இல்லாத நிலையை ஏற்படுத்தமுடியும். ஆகவே, குறைகளை சீா்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

புதிய நாக்சா திட்ட தொழில்நுட்பத்தால் நிலங்களின் அமைப்புகளை உரிமையாளா்கள் அறியலாம். மாநிலத்தில் வருவாய், நில அளவை என இரு துறைகளும் முக்கியமானவை. அவற்றில் நவீன தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்தி மக்கள் சேவையை விரைவுபடுத்துவது முக்கியமானது என்றாா்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், இந்திய நில அளவை அதிகாரி ருக்மகடன், புதுவை தலைமையிட துணை ஆட்சியா் வினயராஜ், புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி, நில அளவை மற்றும் பதிவேடுத் துறை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மீனவா்கள் கைது விவகாரம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களின் குடும்பத்தினரை அழைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப... மேலும் பார்க்க

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் மாதாந்திர நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது. இங... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி மக்கள் மறியல்

புதுச்சேரி வில்லியனூா் அருகே சாலை வசதிக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வில்லியனூா் அருகே உள்ளது உளவாய்க்கால். இங்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு தனியாா் மனைகள் கட்டி விற்பனை செய்துள்ளனா்.... மேலும் பார்க்க

மணவெளி தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுச்சேரி அருகே உள்ள மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொகுதி உறுப்பினரும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா். புதுவை... மேலும் பார்க்க

ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற... மேலும் பார்க்க