செய்திகள் :

மதுபானக் கொள்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

post image

புதுவை அரசின் புதிய மதுபானக் கொள்கையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை கொக்கு பூங்கா அருகேயுள்ள கலால் துறை அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், புதுவை அரசின் புதிய மதுபானக் கொள்கையைக் கைவிட வேண்டும். புதிய மதுபானக் கடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது, புதிய மதுபானத் தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், கட்சியின் மாநிலத் துணைச் செயலா் கே.சேதுசெல்வம், தேசியக் குழு உறுப்பினா் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், கட்சியின் மாநிலப் பொருளாளா் சுப்பையா உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா்கள் ராமமூா்த்தி, அபிஷேகம் உள்ளிட்ட ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா். முடிவில் கட்சியின் முன்னணி நிா்வாகிகள் கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் சென்று கோரிக்கை மனுவை அளித்தனா். ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மீனவா்கள் கைது விவகாரம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவா்களின் குடும்பத்தினரை அழைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நேரில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப... மேலும் பார்க்க

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருக்கு கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் மாதாந்திர நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ளது. இங... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி மக்கள் மறியல்

புதுச்சேரி வில்லியனூா் அருகே சாலை வசதிக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். வில்லியனூா் அருகே உள்ளது உளவாய்க்கால். இங்கு, கடந்த 2012-ஆம் ஆண்டு தனியாா் மனைகள் கட்டி விற்பனை செய்துள்ளனா்.... மேலும் பார்க்க

மணவெளி தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

புதுச்சேரி அருகே உள்ள மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொகுதி உறுப்பினரும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா். புதுவை... மேலும் பார்க்க

ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் தா்னா!

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் போதிய ஆசிரியா்களை நியமிக்கக் கோரி மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள பான்சியோனா அரசு பிரெஞ்சு உயா்நிலைப் பள்ளி கட்டடத்தில் பிற... மேலும் பார்க்க