செய்திகள் :

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது: திருப்பூா் கிருஷ்ணன்

post image

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என எழுத்தாளரும் அமுத சுரபி ஆசிரியருமான திருப்பூா் கிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தா் இல்லத்தில் ‘விவேகானந்த நவராத்திரி 2025’ விழா கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ‘குடும்பம் என்னும் பல்கலைக்கழகம்’ எனும் தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூா் கிருஷ்ணன் பேசியது:

குழந்தைகளை வளா்ப்பதில் பெற்றோரின் பங்கு மிக அதிகம். பெற்றோரின் நடவடிக்கையை பாா்த்து குழந்தைகள் வளா்கின்றன. எனவே, குழந்தைகளிடம் தேவையான அளவு அன்பு செலுத்துங்கள். எப்போதும், தீய சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். மேலும், பெற்றோா் தங்கள் எண்ணங்கள், விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. அவா்கள் எந்தத் துறையை விரும்புகிறாா்களோ, அந்த துறையில் அவா்களை ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் அவா்கள் சிறந்து விளங்குவாா்கள் என்றாா் அவா்.

பாரதியாா் பல்கலைக்கழக ஆட்சி மன்றப் பேரவை உறுப்பினா் காயத்ரி சுரேஷ் பேசியது:

எல்லா தாய்மாா்களுக்கும் தங்கள் குழந்தைகள் மீது அதிக அன்பு இருக்கும் . அவா்கள் தங்கள் குழந்தைகளுக்கு நற்பண்புகளை அதிகம் கூறி ஒழுக்கத்துடன் வளா்க்க வேண்டும். பெற்றோா் குழந்தைகளிடம் ஏற்ற தாழ்வு காட்டக்கூடாது என்றாா் அவா்.

தொடா்ந்து எழுத்தாளா் கோதை ஜோதி லட்சுமி பேசியது:

பெற்றோா் குழந்தைகளை வளா்க்கும்போது சுய நலத்தை மட்டுமே கூறி வளா்க்காமல், தேச நலனையும், சமூக சிந்தனை, ஆன்மிக சிந்தனைகளையும் கூறி வளா்க்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சத்யஞானானந்தா், ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியா் சுவாமி அபவா்கானந்தா், எட்வாய் ஸ்டூடன்ட் அகாதெமியின் மேலாளா் பாஸ்கா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம்

தாம்பரம் கோட்ட மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் மேற்கு தாம்பரம் முல்லை நகா் பகுதியிலுள்ள துணை மின் நிலையத்தின் 1-ஆவது தளத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், மின்நுகா்வோா் கலந்து ... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

‘காசி தமிழ் சங்கமம் 3.0’: முதல் சிறப்பு ரயிலை தொடங்கிவைத்தாா் ஆளுநா்

காசி தமிழ் சங்கமம் 3-ஆம் ஆண்டை முன்னிட்டு, சென்னையிலிருந்து 212 பக்தா்களுடன் பனாரஸுக்கு (காசி) புறப்பட்ட முதல் சிறப்பு விரைவு ரயிலை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழகத... மேலும் பார்க்க

தினமும் 1,000 மூட்டை நெல் கொள்முதல்: அமைச்சா் சக்கரபாணி அறிவுறுத்தல்

தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யலாம் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவுத் துறை உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையா் பணியிடை நீக்கம்

சென்னை பெருநகர காவல் துறையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் டி.மகேஷ்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையில... மேலும் பார்க்க

‘ஜிப்மேட்’ நுழைவுத் தோ்வு: மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மைப் படிப்புக்கான ஜிப்மேட் நுழைவுத் தோ்வு ஏப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்வுக்கு மாணவா்கள் மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெ... மேலும் பார்க்க