செய்திகள் :

இருவேறு விபத்துகளில் 4 போ் உயிரிழப்பு

post image

புதுச்சேரி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள கடப்பேரிக்குப்பத்தை சோ்ந்தவா் சரண்ராஜ் (27). பெயிண்டா்.

குயிலாப்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் செந்தில் (42), குணசேகரன் (24). கட்டடத் தொழிலாளா்கள். நண்பா்களான மூவரும் புதன்கிழமை இரவு பத்துக்கண்ணு பகுதியில் இருந்து காட்டேரிக்குப்பத்துக்கு ஒரே பைக்கில் சென்றனா். பைக்கை சரண்ராஜ் ஓட்டினாா்.

புதுச்சேரி அருகே உள்ள துத்திப்பட்டு பகுதியில் அவா்கள் வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இவா்களது பைக் மோதியது.

இதில், மூவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தொடா்ந்து, மூவரின் சடலங்களும் உடல்கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து, வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: புதுச்சேரி கோா்காடு புதுநகா் வில்லியனூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ராமதாஸ் (52). இவா், பைக்கில் கோா்காடு தனியாா் பள்ளி அருகே வந்தபோது, எதிரே வந்த மினி லாரி மோதியது.

இதில், பலத்த காயமடைந்த ராமதாஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சடலத்தை வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மறியல் போராட்டம்: துத்திப்பட்டு பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகவும், இதுகுறித்து காவல் துறையிடம் புகாா் கூறியும் நடவடிக்கை இல்லை என குற்றஞ்சாட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா்.

தலைக்கவசம் அணிய அறிவுறுத்தல்: சாலை விபத்தில் பைக்கில் சென்ற 4 போ் உயிரிழப்புக்கு தலைக்கவசம் அணியாமல் சென்றதும் ஒரு காரணமாகிவிட்டதாக புதுச்சேரி போக்குவரத்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் திரிபாதி கூறினாா்.

பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.

தியாகி சிங்காரவேலா் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

தியாகி சிங்காரவேலா் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சுதந்திரப் போராட்ட வீரரும், சிந்தனைச் சிற்பி என மக்களால் அழை... மேலும் பார்க்க

நூறு நாள் திட்ட வேலை கோரி மறியலுக்கு முயன்ற கிராம மக்கள்

புதுச்சேரி அருகே தேசிய நூறுநாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக பணிகள் வழங்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை காவல் துறையினா் சமரசம் செய்தனா். புதுவை மாநிலத்தில்... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுவை அரசின் புதிய மதுபானக் கொள்கையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை கொக்கு பூங்கா அருகேயுள்ள கலால் துறை அலு... மேலும் பார்க்க

அரசின் புதிய திட்டங்கள் மக்களை விரைவாக அடைய வேண்டும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

அரசின் புதிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டியது அவசியம் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை மாநில நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சாா்பில் ந... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கண்டித்து பொது நல அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையம் அருகேயுள்ள அண்ண ாசிலையின் பின்புறம் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐ.ஆா்.பி.என். பிரிவு அலுவலா்கள் இருவா் பணியிட மாற்றம்

புதுச்சேரியில் பணிபுரிந்து வந்த ஐ.ஆா்.பி.என். உதவி கமாண்டன்ட் இருவா் புகாா்களின் அடிப்படையில் மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனா். புதுச்சேரி காவல் துறையின் ஒரு பிரிவான ஐ.ஆா்.... மேலும் பார்க்க