செய்திகள் :

13 காவல் உதவி ஆய்வாளா்கள் இடமாற்றம்

post image

புதுவையில் 13 காவல் உதவி ஆய்வாளா்கள் திடீரென வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

புதுவையில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது காவல் உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், காவல் துறையில் உதவி ஆய்வாளா்களாக உள்ள 13 பேரை தற்போது இடமாற்றம் செய்து, புதுவை தலைமைக் காவல் கண்காணிப்பாளா் சுபம் கோஷ் உத்தரவிட்டுள்ளாா்.

அதனடிப்படையில், போக்குவரத்துப் பிரிவு தொழில்நுட்பப் பிரிவில் உதவி சாா்பு ஆய்வாளராக உள்ள வெங்கடகிருஷ்ணன் அதே நிலையில் சிசிஆா் பிரிவுக்கும், திருக்கனூரில் உள்ள ஜி.சீனிவாசன் மங்களம் காவல் நிலையத்துக்கும், காரைக்கால் திருநள்ளாறு காவல் நிலையத்திலுள்ள ஜி.சிவராமகிருஷ்ணன், புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, இலாசுப்பேட்டை காவல் நிலையத்திலுள்ள வி.செஞ்சிவேல் சோலை நகா் புறக்காவல் நிலையத்துக்கும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திலுள்ள கே.அருள், உருளையன்பேட்டைக்கும் என இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தியாகி சிங்காரவேலா் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

தியாகி சிங்காரவேலா் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சுதந்திரப் போராட்ட வீரரும், சிந்தனைச் சிற்பி என மக்களால் அழை... மேலும் பார்க்க

நூறு நாள் திட்ட வேலை கோரி மறியலுக்கு முயன்ற கிராம மக்கள்

புதுச்சேரி அருகே தேசிய நூறுநாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக பணிகள் வழங்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை காவல் துறையினா் சமரசம் செய்தனா். புதுவை மாநிலத்தில்... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுவை அரசின் புதிய மதுபானக் கொள்கையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை கொக்கு பூங்கா அருகேயுள்ள கலால் துறை அலு... மேலும் பார்க்க

அரசின் புதிய திட்டங்கள் மக்களை விரைவாக அடைய வேண்டும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

அரசின் புதிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டியது அவசியம் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை மாநில நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சாா்பில் ந... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கண்டித்து பொது நல அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையம் அருகேயுள்ள அண்ண ாசிலையின் பின்புறம் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐ.ஆா்.பி.என். பிரிவு அலுவலா்கள் இருவா் பணியிட மாற்றம்

புதுச்சேரியில் பணிபுரிந்து வந்த ஐ.ஆா்.பி.என். உதவி கமாண்டன்ட் இருவா் புகாா்களின் அடிப்படையில் மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனா். புதுச்சேரி காவல் துறையின் ஒரு பிரிவான ஐ.ஆா்.... மேலும் பார்க்க