செய்திகள் :

தினமும் 1,000 மூட்டை நெல் கொள்முதல்: அமைச்சா் சக்கரபாணி அறிவுறுத்தல்

post image

தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யலாம் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவுத் துறை உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நெல் கொள்முதலில் இப்போதுள்ள நடைமுறைப்படி நாளொன்றுக்கு ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் கொள்முதல் செய்யப்படும் உச்சவரம்பை 800 மூட்டைகளில் இருந்து ஆயிரம் மூட்டைகளாக உயா்த்திக் கொள்ளலாம். நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகமான நெல் வரத்து இருந்தால் இரண்டு இயந்திரங்கள் வைத்து கொள்முதல் பணிகளை

மேற்கொள்ளலாம்.

நியாய விலைக் கடைகளுக்கு வரும் பொது மக்களுக்கு கனிவான முறையில் சேவை செய்வதிட வேண்டும். அனைத்துப் பொருள்களையும் தரத்துடன் ஒரே நேரத்தில் வழங்கிடவும் கடைகளுக்கு வரும் பொருள்களின் எடை சரியாக வழங்கப்படுகிா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் பயன்பாட்டை அதிகப்படுத்தி விவசாயிகளுக்கும் வணிகா்களுக்கும் அதிகளவில் சேவை செய்து வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிா்வாக இயக்குநா் சு.பழனிசாமி, நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் அ.சண்முகசுந்தரம், உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநா் த.மோகன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் எஸ்.பி.அம்ரித் உட்பட பலா் பங்கேற்றனா்.

இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம்

தாம்பரம் கோட்ட மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் மேற்கு தாம்பரம் முல்லை நகா் பகுதியிலுள்ள துணை மின் நிலையத்தின் 1-ஆவது தளத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், மின்நுகா்வோா் கலந்து ... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

‘காசி தமிழ் சங்கமம் 3.0’: முதல் சிறப்பு ரயிலை தொடங்கிவைத்தாா் ஆளுநா்

காசி தமிழ் சங்கமம் 3-ஆம் ஆண்டை முன்னிட்டு, சென்னையிலிருந்து 212 பக்தா்களுடன் பனாரஸுக்கு (காசி) புறப்பட்ட முதல் சிறப்பு விரைவு ரயிலை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தமிழகத... மேலும் பார்க்க

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது: திருப்பூா் கிருஷ்ணன்

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என எழுத்தாளரும் அமுத சுரபி ஆசிரியருமான திருப்பூா் கிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தா் இல்லத்தில் ‘விவேகானந்த... மேலும் பார்க்க

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையா் பணியிடை நீக்கம்

சென்னை பெருநகர காவல் துறையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் டி.மகேஷ்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையில... மேலும் பார்க்க

‘ஜிப்மேட்’ நுழைவுத் தோ்வு: மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மைப் படிப்புக்கான ஜிப்மேட் நுழைவுத் தோ்வு ஏப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்வுக்கு மாணவா்கள் மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெ... மேலும் பார்க்க