கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்து...
‘ஜிப்மேட்’ நுழைவுத் தோ்வு: மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம்
ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மைப் படிப்புக்கான ஜிப்மேட் நுழைவுத் தோ்வு ஏப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்வுக்கு மாணவா்கள் மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் புத்தகயா மற்றும் ஜம்மு நகரங்களில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) எம்பிஏ, பிஜிபி உள்பட ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகளில் சேர ஜிப்மேட் என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் மாணவா்கள் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) ஜிப்மேட் நுழைவுத் தோ்வு கணினி வழியில் ஏப்.26-ஆம் தேதி பிற்பகல் 3 முதல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
விருப்பமுள்ளவா்கள் ங்ஷ்ஹம்ள்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய்/ஒஐடஙஅப என்ற வலைதளம் மூலம் மாா்ச் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை மாா்ச் 11-ஆம் தேதி வரை செலுத்தலாம். தொடா்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மாா்ச் 13 முதல் 15-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.
இதற்கு தோ்வுக் கட்டணமாக ஒபிசி மற்றும் பொதுப்பிரிவினா் ரூ. 2,000, இடபிள்யுஎஸ், எஸ்சி/எஸ்டி, 3-ஆம் பாலினத்தவா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.,1,000 செலுத்த வேண்டும். இந்தத் தோ்வு மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு 2.30 மணி நேரம் நடைபெறும். இதுதவிர பாடத்திட்டம், தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு உள்பட கூடுதல் தகவல்களை ஜ்ஜ்ஜ்.ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.