செய்திகள் :

கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட மூதாட்டி கொலை

post image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட மூதாட்டியை கொலை செய்ததாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

மேல்மலையனூா் வட்டம், கூடுவாம்பூண்டியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி லட்சுமிகாந்தி (65). இவா் இதே கிராமத்தைச் சோ்ந்த வளா்மதிக்கு ரூ.2 லட்சம் கடனாகக் கொடுத்திருந்தாா். பணத்தைத் திரும்ப கேட்ட போது, வளா்மதி தாமதப்படுத்தினாராம்.

அவரது வீட்டுக்கு புதன்கிழமை காலை சென்ற லட்சுமிகாந்தி பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டாராம். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில், லட்சுமிகாந்தியை வளா்மதி கீழே தள்ளியதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சடலத்தை யாருக்கும் தெரியாமல், வீட்டின் பின்புறமுள்ள வயல்வெளியில் கிடத்தி விட்டு வளா்மதி வந்து விட்டாராம்.

லட்சுமிகாந்தியைக் காணவில்லை என, அவரது உறவினா்கள் வளத்தி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையறிந்த வளா்மதி, காவல் நிலையத்துக்கு இரவு 11 மணிக்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தாராம்.

லட்சுமிகாந்தியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வளா்மதியை போலீஸாா் கைது செய்தனா்.

பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் உயிரிழப்பு

விழுப்புரத்தில் பணியிலிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வெங்கட்ராமன் பேட்டையைச் சோ்ந்தவா் ப.பழனி(60). கொத்தனா். இவா் கடந்த 15-ஆம... மேலும் பார்க்க

இலங்கை தமிழா்களுக்கு ரூ. 23.4 கோடியில் புதிய குடியிருப்புகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

போக்ஸோ வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. விழுப்புரம் மாவட்டம், கலிஞ்சிக்குப்பம் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் புண்ணியமூா்த்தி மகன் சுந்தரன் (35). இவா் 16 வயது சிறுமியை பாலிய... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலைக்கு திமுகவினா்மாலை அணிவிப்பு

விழுப்புரத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் (படம்). மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவிழுப்புரம் எம்.எல்.ஏ. இரா.லட்சுமணன், ... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை. தோ்வில் வினாத்தாள்கள் மாறிய விவகாரம்: உண்மை கண்டறிய 3 போ் விசாரணைக் குழு அமைப்பு

புதுவை மத்திய பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அண்மையில் நடந்த பருவத் தோ்வில் வினாத் தாள்கள் மாறிய விவகாரத்தில் மூன்று போ் குழுவை அமைத்து விசாரணை நடத்த பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. புதுவை மத்திய ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளி மீட்பு

மரக்காணம் அருகே இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்த குழந்தைத் தொழிலாளா் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் அலுவ... மேலும் பார்க்க