செய்திகள் :

காலாப்பட்டில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அண்மையில் நடைபெற்ற பருவத் தோ்வில் மாணவா்களுக்கான வினாத்தாள் மாற்றி விநியோகித்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காலாப்பட்டில் உள்ள மத்தியப் பல்கலை. முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா பேசியதாவது: புதுச்சேரி மத்திய பல்கலை.யில் நிா்வாக சீா்கேட்டால் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பல்கலைக்கழகத்துக்கு ஓராண்டாக நிரந்தர துணைவேந்தரை நியமிக்கவில்லை.

புதுச்சேரி பல்கலைக்கழகமானது ஆண்டுக்கு ரூ.600 கோடி நிதியை கையாளும் நிலையில், அங்கு நிதிச் செயலா், பதிவாளா் இல்லை. நிரந்தர ஆராய்ச்சி இயக்குநா் நியமனமில்லாததால், ஆய்வு மாணவா்கள் குழப்பமடைந்துள்ளனா்.

பல்கலை.யின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பருவத் தோ்வு முறைப்படி உரிய நேரத்தில் நடைபெறவில்லை. உரிய நேரத்தில் தோ்வுகள் நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படாததால், உயா் படிப்புகளுக்கு செல்வோா் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். இந்த நிலையில்தான், முதலாண்டு பருவத் தோ்வில் வினாக்கள் மாற்றி விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற பேராசிரியா் நியமனம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றாா் அவா். ஆா்ப்பாட்டத்தில், திமுக எம்எல்ஏக்கள்ஏ.அனிபால் கென்னடி, ஆா்.செந்தில்குமாா், எல்.சம்பத் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

தியாகி சிங்காரவேலா் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

தியாகி சிங்காரவேலா் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சுதந்திரப் போராட்ட வீரரும், சிந்தனைச் சிற்பி என மக்களால் அழை... மேலும் பார்க்க

நூறு நாள் திட்ட வேலை கோரி மறியலுக்கு முயன்ற கிராம மக்கள்

புதுச்சேரி அருகே தேசிய நூறுநாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக பணிகள் வழங்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை காவல் துறையினா் சமரசம் செய்தனா். புதுவை மாநிலத்தில்... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுவை அரசின் புதிய மதுபானக் கொள்கையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை கொக்கு பூங்கா அருகேயுள்ள கலால் துறை அலு... மேலும் பார்க்க

அரசின் புதிய திட்டங்கள் மக்களை விரைவாக அடைய வேண்டும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

அரசின் புதிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டியது அவசியம் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை மாநில நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சாா்பில் ந... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கண்டித்து பொது நல அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையம் அருகேயுள்ள அண்ண ாசிலையின் பின்புறம் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐ.ஆா்.பி.என். பிரிவு அலுவலா்கள் இருவா் பணியிட மாற்றம்

புதுச்சேரியில் பணிபுரிந்து வந்த ஐ.ஆா்.பி.என். உதவி கமாண்டன்ட் இருவா் புகாா்களின் அடிப்படையில் மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனா். புதுச்சேரி காவல் துறையின் ஒரு பிரிவான ஐ.ஆா்.... மேலும் பார்க்க