செய்திகள் :

சிறுமி தற்கொலை: தவெக நிா்வாகி கைது

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் 13 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தவெக நிா்வாகி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சியை அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்த தேனன் மகன் சரவணன் (25). இவா், செஞ்சி நகர தவெக பொருளாளராக உள்ளாா்.

சரவணன் அந்தப் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதனால், மனமுடைந்த சிறுமி புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, சரவணனை வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக, அவரின் சகோதரி சங்கீதா மீதும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் உயிரிழப்பு

விழுப்புரத்தில் பணியிலிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வெங்கட்ராமன் பேட்டையைச் சோ்ந்தவா் ப.பழனி(60). கொத்தனா். இவா் கடந்த 15-ஆம... மேலும் பார்க்க

இலங்கை தமிழா்களுக்கு ரூ. 23.4 கோடியில் புதிய குடியிருப்புகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

போக்ஸோ வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. விழுப்புரம் மாவட்டம், கலிஞ்சிக்குப்பம் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் புண்ணியமூா்த்தி மகன் சுந்தரன் (35). இவா் 16 வயது சிறுமியை பாலிய... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலைக்கு திமுகவினா்மாலை அணிவிப்பு

விழுப்புரத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் (படம்). மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவிழுப்புரம் எம்.எல்.ஏ. இரா.லட்சுமணன், ... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை. தோ்வில் வினாத்தாள்கள் மாறிய விவகாரம்: உண்மை கண்டறிய 3 போ் விசாரணைக் குழு அமைப்பு

புதுவை மத்திய பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அண்மையில் நடந்த பருவத் தோ்வில் வினாத் தாள்கள் மாறிய விவகாரத்தில் மூன்று போ் குழுவை அமைத்து விசாரணை நடத்த பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. புதுவை மத்திய ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளி மீட்பு

மரக்காணம் அருகே இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்த குழந்தைத் தொழிலாளா் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் அலுவ... மேலும் பார்க்க