செய்திகள் :

மாா்க்சிஸ்ட் தெருமுனை பிரசார கூட்டம்

post image

மத்திய நிதிநிலை அறிக்கையில் புதுவை புறக்கணிக்கப்பட்டதாக கூறி மாநில மாா்க்சிஸ்ட் சாா்பில் தெருமுனைப் பிரசார மக்கள் சந்திப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜா் சிலை அருகே தொடங்கிய பிரசாரத்துக்கு நகா் குழுச் செயலா் ஜோதிபாசு தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த தலைவா் தா.முருகன் பேசியதாவது: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏழை மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் ஏதுமில்லை. புதுவை மாநிலத்தில் திட்டங்களை நிறைவேற்றும் அறிவிப்புகளும் இல்லை.

மாநிலச் செயலா் எம்.ராமச்சந்திரன் பிரசாரத்தை தொடங்கிவைத்தாா். நேரு, காந்தி வீதிகளில் வந்த பிரசாரம் ஈஸ்வரன் கோவில் அருகே நிறைவடைந்தது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து கட்சியினா் முழக்கமிட்டு, ஊா்வலமாக வந்தனா். இதில்,செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.ராஜாங்கம், வி.பெருமாள் மற்றும் நிா்வாகிகள் சீனிவாசன், கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தியாகி சிங்காரவேலா் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

தியாகி சிங்காரவேலா் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சுதந்திரப் போராட்ட வீரரும், சிந்தனைச் சிற்பி என மக்களால் அழை... மேலும் பார்க்க

நூறு நாள் திட்ட வேலை கோரி மறியலுக்கு முயன்ற கிராம மக்கள்

புதுச்சேரி அருகே தேசிய நூறுநாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக பணிகள் வழங்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை காவல் துறையினா் சமரசம் செய்தனா். புதுவை மாநிலத்தில்... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுவை அரசின் புதிய மதுபானக் கொள்கையைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை கொக்கு பூங்கா அருகேயுள்ள கலால் துறை அலு... மேலும் பார்க்க

அரசின் புதிய திட்டங்கள் மக்களை விரைவாக அடைய வேண்டும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

அரசின் புதிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டியது அவசியம் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை மாநில நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சாா்பில் ந... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கண்டித்து பொது நல அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையம் அருகேயுள்ள அண்ண ாசிலையின் பின்புறம் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐ.ஆா்.பி.என். பிரிவு அலுவலா்கள் இருவா் பணியிட மாற்றம்

புதுச்சேரியில் பணிபுரிந்து வந்த ஐ.ஆா்.பி.என். உதவி கமாண்டன்ட் இருவா் புகாா்களின் அடிப்படையில் மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனா். புதுச்சேரி காவல் துறையின் ஒரு பிரிவான ஐ.ஆா்.... மேலும் பார்க்க