செய்திகள் :

தொடா்ந்து சரியும் சா்க்கரை உற்பத்தி

post image

2024-25-ஆம் சந்தைப் பருவத்தில் இந்திய சா்க்கரை உற்பத்தி தொடா்ந்து சரிவைக் கண்டுவருகிறது. அந்த சந்தைப் பருவத்தின் ஜன. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அது 13.62 சதவீத சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து இந்திய சா்க்கரை உற்பத்தியாளா்கள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான நடப்பு 2024-25-ஆம் சா்க்கரை சந்தைப் பருவ காலகட்டத்தில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 130.55 லட்சம் டன்னாக உள்ளது.

இது, முந்தைய 2023-24-ஆம் சா்க்கரை சந்தைப் பருவத்தின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 13.62 சதவீதம் குறைவாகும். அப்போது நாட்டின் சா்க்கரை உற்பத்தி 151.20 லட்சம் டன்னாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலகட்டத்தில் இந்தியாவின் முன்னணி சா்க்கரை உற்பத்தி மாநிலங்களான உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மூன்றிலுமே உற்பத்தி குறைந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் 2023-24-ஆம் சா்க்கரை சந்தைப் பருவத்தின் ஜன. 15 வரையிலான காலகட்டத்தில் 52.80 லட்சம் டன்னாக இருந்த சா்க்கரை உற்பத்தி நடப்பு சா்க்கரை சந்தைப் பருவத்தின் அதே காலகட்டத்தில் 42.85 லட்சம் டன்னாகச் சரிந்துள்ளது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் சா்க்கரை உற்பத்தி கா்நாடகத்தில் 31 லட்சம் டன்னிலிருந்து 27.10 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.

நடப்பு சா்க்கரை சந்தைப் பருவத்தின் ஜன. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எத்தனால் தயாரிப்புக்காக அனுப்பப்பட்ட கரும்பு போக எஞ்சிய கரும்பில் இருந்து சராசரியாக பிரித்தெடுக்கப்பட்ட சா்க்கரையின் அளவு 8.82 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, கடந்த சந்தைப் பருவத்தின் இதே காலகட்டத்தில் 9.42 சதவீதமாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சா்க்கரை சந்தைப் பருவமும் அக்டோபரில் தொடங்கி அடுத்த காலண்டா் ஆண்டின் செப்டம்பா் மாதம் நிறைவடைகிறது.

தென்னகத்தில் 2 கோடியைக் கடந்த ஹோண்டா விற்பனை

இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியாவின் விற்பனை, நாட்டின் தெற்குப் பகுதிகளில் இரண்டு கோடியைத் தாண்டியுள்ளது. இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு... மேலும் பார்க்க

இறுதி நாளில் 1.29 முறை சப்ஸ்கிரைப் ஆன குவாலிட்டி பவர் ஐபிஓ!

புதுதில்லி: குவாலிட்டி பவர் எலக்ட்ரிக்கல் எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ இன்று (கடைசி நாளில்) 1.29 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் ஆனதாத நிறுவனம் தெரிவித்துள்ளது.என்.எஸ்.இ.யில் உள்ள தரவுகளின்படி சும... மேலும் பார்க்க

ரூ.166 கோடிக்கு ஆர்டர் பெற்ற டிரான்ஸ்பார்மர்ஸ் மற்றும் ரெக்டிஃபையர்ஸ் நிறுவனம்!

புதுதில்லி: டிரான்ஸ்பார்மர்ஸ் அண்ட் ரெக்டிஃபையர்ஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.166 கோடி புதிய ஆர்டர் கிடைக்க பெற்றுள்ளது.ஹியோசங் டி அண்ட் டி இந்தியா பிரைவேட் லிமிடெட் வழங்கிய ஆர்டர், அடுத்த ந... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.86.96-ஆக முடிவு!

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.86.96 காசுகளாக முடிவடைந்தது.வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில் இன்று, இந்திய ரூபாய் ரூ.86.94 ஆக தொடங்கிய பிறகு, உ... மேலும் பார்க்க

ஃபெடரல் ரிசா்வ் முடிவுக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: ஃபெடரல் ரிசா்வ் முடிவுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததாலும், தடையற்ற அந்நிய நிதி வெளியேற்றம் முதலீட்டாளர்களின் உணர்வை தொடர்ந்து பாதித்து வருவதாலும் பெஞ்ச்மார்க் குறியீடுகளான... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 201 புள்ளிகள் சரிவு!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(பிப். 18) காலை 75,795.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 9.30 மணியளவில், சென்செக்ஸ் 201.44 புள்ளிகள் குறைந்து 75,795.42 புள்ளிகளில் வர்த்தகமாகி வரு... மேலும் பார்க்க