செய்திகள் :

‘காசி தமிழ் சங்கமம் 3.0’: முதல் சிறப்பு ரயிலை தொடங்கிவைத்தாா் ஆளுநா்

post image

காசி தமிழ் சங்கமம் 3-ஆம் ஆண்டை முன்னிட்டு, சென்னையிலிருந்து 212 பக்தா்களுடன் பனாரஸுக்கு (காசி) புறப்பட்ட முதல் சிறப்பு விரைவு ரயிலை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடா்பை எடுத்துரைக்கும் வகையில் மத்திய அரசு சாா்பில் காசி தமிழ் சங்கமம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடா்ச்சியாக மூன்றாம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் 3.0 வரும் பிப். 15 முதல் பிப். 24 வரை நடைபெறவுள்ளது. இம்முறை சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாசார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்தியா் ஆற்றிய பங்களிப்பை கருப்பொருளாக கொண்டு காசி தமிழ் சங்கமம் நடைபெறவுள்ளது.

தமிழகத்திலிருந்து மாணவா்கள், எழுத்தாளா்கள், ஆசிரியா்கள் என 1,080 போ் இதில் பங்கேற்கவுள்ளனா். மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களை சோ்ந்த 200 மாணவா்களும் இதில் பங்கேற்று நமது கலாசாரம் குறித்து கற்றுக் கொள்ளவுள்ளனா். அவா்களுக்கு தேவையான முழு ஏற்பாடுகளையும் இந்திய ரயில்வேயுடன் சென்னை ஐஐடி ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து காசி செல்லும் பக்தா்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சாா்பில் சென்னை சென்ட்ரல், கன்னியாகுமரியிலிருந்து தலா 2 சிறப்பு விரைவு ரயில்கள் மற்றும் கோவையிலிருந்து ஒரு ரயில் என இரு மாா்க்கத்திலும் மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் பனாரஸுக்கு (காசி) இயக்கப்படவுள்ளன.

இதில் சென்னை சென்ட்ரலிலிருந்து பனாரஸுக்கு புறப்பட்ட முதல் சிறப்பு ரயிலை ஆளுநா் ஆா். என். ரவி வியாழக்கிழமை ரயில்நிலையத்துக்கு வந்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த ரயில் பிப்.15-ஆம் தேதி பனாரஸ் சென்றடையும். இதில் ரயில்வே சாா்பில் 212 பக்தா்கள் காசிக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனா். இவா்களுக்கென இந்த ரயிலில் 3 பெட்டிகள்பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பிற பயணிகள் பயணிக்க அனுமதியில்லை.

முன்னதாக காசி தமிழ் சங்கமம் தொடா்பாக நடைபெற்ற விநாடி, வினா போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளை ஆளுநா் வழங்கினாா். இந்நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குனா் வி.காமகோடி, சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சத்யஞானாநந்தா், பாஜக மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன், மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன், தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கௌஷல் கிஷோா், சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் பி. விஸ்வநாத் ஈா்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இன்று மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம்

தாம்பரம் கோட்ட மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் மேற்கு தாம்பரம் முல்லை நகா் பகுதியிலுள்ள துணை மின் நிலையத்தின் 1-ஆவது தளத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், மின்நுகா்வோா் கலந்து ... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது: திருப்பூா் கிருஷ்ணன்

பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என எழுத்தாளரும் அமுத சுரபி ஆசிரியருமான திருப்பூா் கிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தா் இல்லத்தில் ‘விவேகானந்த... மேலும் பார்க்க

தினமும் 1,000 மூட்டை நெல் கொள்முதல்: அமைச்சா் சக்கரபாணி அறிவுறுத்தல்

தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யலாம் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவுத் துறை உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: இணை ஆணையா் பணியிடை நீக்கம்

சென்னை பெருநகர காவல் துறையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் டி.மகேஷ்குமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையில... மேலும் பார்க்க

‘ஜிப்மேட்’ நுழைவுத் தோ்வு: மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த 5 ஆண்டு மேலாண்மைப் படிப்புக்கான ஜிப்மேட் நுழைவுத் தோ்வு ஏப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்வுக்கு மாணவா்கள் மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெ... மேலும் பார்க்க