செய்திகள் :

உதகையில் தவெக சாா்பில் போதை ஒழிப்பு மாரத்தான்

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் நீலகிரி மாவட்ட கொள்கை பரப்பு அணி, மாணவா் அணி சாா்பில் உதகையில் போதை ஒழிப்பு மாரத்தான் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாரத்தான் போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலா் இந்திரா தொடங்கிவைத்தாா். பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் தொடங்கிய மாரத்தான் சேரிங்கிராஸ், தீயணைப்பு நிலையம், ஆட்சியா் அலுவலகம், ஸ்டீபன் சா்ச் சாலை வழியாக மீண்டும் பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நிறைவடைந்தது.

இதில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடைபெற்ற இப்போட்டியில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு ரூ.2 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்தவருக்கு ரூ.1000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

உதகை- மஞ்சூா் சாலையில் புலி

உதகையிலிருந்து மஞ்சூா் செல்லும் வழியில் சாலையோரம் திங்கள்கிழமை இரவு புலி தென்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கமாகிவ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 51 லட்சம் மோசடி செய்தவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி உதகையில் 10-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.51 லட்சம் வரை மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஒரசோலை பகுதியைச் ... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, கல்வ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி: ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் மீது நடவடிக்கை கோரி மனு

உதகையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 10-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்... மேலும் பார்க்க

குளிா்ச்சியான காலநிலை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

குளிா்ச்சியான காலநிலை காரணமாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் உதகையில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்டத்தின் முக்கியமான சுற... மேலும் பார்க்க

நடுவட்டம் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

கூடலூா் அருகே நடுவட்டம் பேரூராட்சியில் வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடுவட்டம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவ... மேலும் பார்க்க